24 அக்., 2009

இன்று படித்தவை-10: அக்டோபர் 24, 2009

10. "புதிய தலைமுறை", வார இதழ், இதழ் நான்கு, மலர் ஒன்று, அக்டோபர் 29, 2009. (ஆர்ட் பேப்பரில் வண்ணப்படங்களுடன் 64 பக்கங்கள் - விலை ரூபாய் ஐந்து! )

நேர்த்தியான கெட்-அப். நம்பமுடியாத விலை. பயனுள்ள பல விஷயங்கள். இதன் ஆசிரியர் திரு மாலன் அவர்கள். (காரைக்குடி புத்தகத் திருவிழாவைத் துவக்கி வைக்க ஒரு வருடம் இவரை அழைத்து வந்தது, அவரது இனிய உரையைக் கேட்டு மகிழ்ந்தது, மதிய உணவு அவரோடு ஒரே மேஜையில் உண்டது அனைத்தும் நினைவிற்கு வருகிறது) இளைய தலைமுறைக்கான இதழ் என்ற போதும், என்னால் விரும்பிப் படிக்க முடிந்தது. பல பிடித்தமான விஷயங்கள்:

ரமேஷ் பிரபாவின் எப்படி ஜெயித்தார்கள்? 'கவின்கேர்' ரங்கநாதன் அவர்களின் சாதனை வரலாறு.


வறுமையை வென்றவர்: கர்ணாவின் 'உண்மையான கனவு தன்னைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும்' - 'ஃபுட் கிங் கேட்டரிங் சர்வீஸ்' நிர்வாக இயக்குனர், சரத்பாபு அவர்களது சாதனை வரலாறு. அவரது வெற்றி விதிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை:

லட்சியத்தில் தெளிவு
எப்போதும் அது குறித்த நினைப்பு
நூறு சத்தம் ஈடுபாடு
சரியான திட்டம்
கடும் உழைப்பு
யாருக்கும் கெடுதல் செய்யாத நல்லெண்ணம்

அடுத்து...

முனைவர் அப்துல் கலாம் அவர்களின் தொடர் கட்டுரை 'இளைய இந்தியா 2020' : அறிவியலும் ஆன்மீகமும் இணையும் போது..

விழிப்புணர்வு கொண்ட சமூகத்தின் மூன்று அங்கங்கள்:

நற்சிந்தனைகளை உள்ளடக்கிய கல்வி
ஆன்மீக உணர்வாக மாற்றமடையும் மதம்
சமூக மாற்றத்திற்கான பொருளாதார வளர்ச்சி

அற்புதமான கட்டுரை. இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அவசியம் படிக்கவேண்டியது.

திரு வெ.இறையன்பு அவர்களின் தொடர் கட்டுரை: "பத்தாயிரம் மைல் பயணம்"

இன்றைய நவீன விளையாட்டுக்கள் பலவற்றின் சுவையான வரலாறு.

பழைய இதழ்களையும் தேடி வாங்கிப் படிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: