24 அக்., 2009

இன்று படித்தவை-3: அக்டோபர் 24, 2009

3. அன்னை ஸ்ரீசாரதாதேவி - விரிவான வாழ்க்கை வரலாறு - எழுதியவர் சுவாமி ஆசுதோஷானந்தர் - பல வருடங்களுக்கு முன் ஒருமுறை மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திருக்கு சென்றிருந்தபோது வாங்கியது. அப்போதைய விலை ரூபாய் ஐம்பது)

இன்று படித்தது, முதல் இரண்டு பக்கங்கள். அதிலிருந்து என் மனதில் தைத்தது, மனதில் பதிந்தது:

"வானத்தை நானே ஈன்றேன். வானுக்கு மேலும், கீழும் என் ஆதிக்கமே உள்ளது. என் உடல் பிரபஞ்சத்தையே வியாபித்து நிற்கிறது. காற்றை உலகைப் படைத்தவள் நானே. எனது மகிமையால் நான் மண்ணையும், விண்ணையும் கடந்து நிற்கிறேன்". பிரம்ம நிலையை அடைந்த பெண்மணி ஒருவர் இப்படிக் கூறுவதாக வேதத்தில் வருகிறது. இப்படி ஒரு மேன்மையான நிலையை அடைய வேண்டும் என்ற துடிப்பு வேதகால மகளிரிடம் இருந்தது. இதுவே அவர்களது லட்சியமாகவும் இருந்தது.

ஆனால் வேத கால இறுதியில் நம் நாடு இந்த உயரிய நிலையில் இருந்து வழுவியது. பெண்கள் வேதம் கற்பது தடை செய்யப்பட்டது. அவர்கள் ஆணுக்கு அடங்கி நடக்குமாறு செய்யப்பட்டார்கள். அந்நியர் படையெடுப்புகளால் விளைந்த சமுதாய மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இருப்பினும் சமுதாயம் பெண்களுக்கு இழைத்த அநீதிகளில் இதுவும் ஒன்று. இதன் பலனை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இருப்பினும் மற்ற கல்வி, பெருமை பெண்களுக்கு மறுக்கப்படவில்லை. வேத காலத்தில் இருந்த பிரம்மவாதினி லட்சியம் மறைந்து, பதிவிரதை லட்சியம் அதன் இடத்தைப் பிடித்துகொண்டது.

பெண்ணைச் சிறுவயதில் தந்தையும், இளவயதில் கணவனும், முதுமையில் மகனும் காக்கவேண்டும் என்கிறது மனு நீதி. ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும் என்று கூறிய அதே மனு நீதி, 'பெண் எங்கே மதிக்கப்ப்டுகிறாளோ
அங்கே தேவதைகள் மகிழ்கிறார்கள்' என்கிறது. தேவி மகாத்மியம் இன்னும் பல படிகள் மேலே சென்று 'எல்லாப் பெண்களும் தேவியின் அம்சம். இவ்வுலகில் காணும் பெண்கள் எல்லாம் உன் வடிவம்' என்கிறது.

அடுத்து...?

கருத்துகள் இல்லை: