24 அக்., 2009

இன்று படித்தவை-2: அக்டோபர் 24, 2009

2. "Complete Works of Swami Vivekananda", Volume VII (கொல்கத்தா அத்வைத ஆஸ்ரமத்தின் மலிவுப்பதிப்பு)

மொத்தம் ஒன்பது புத்தகங்கள். தற்போது இரண்டாம் முறையாக வாசிக்கிறேன். முதற் தடவை போலல்லாது ஒவ்வொரு பக்கத்தையும் ஆழமாக வாசித்து, அசை போட்டுச் செல்கிறேன். எனவே தினமும் ஓரிரு பக்கங்கள் மட்டுமே படிக்கிறேன். இன்று படித்தது பக்கங்கள் 44-45.

அதிலிருந்து நான் புரிந்துகொண்டது:

பக்தி மார்க்கம் அல்லது அன்பு வழி என்பது இயல்பானது, இனிமையானது. தத்துவ மார்க்கம் அல்லது ஞான மார்க்கம் சிரமமானது; எதையும் ஏன், ஏதற்கு என்று கேள்விகள் கேட்டு புரிந்துகொண்டு முன்னேறவேண்டும். அன்புவழி தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வது; எளிமையானது, இன்பமானது; ஆனால் நீண்ட பாதை, நீண்ட பயணம்.

மேன்மையான ஒரு லட்சியத்தை தேர்ந்து, அதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள். மரணம் என்பது நிச்சயம்; அப்படியிருக்க ஒரு மேன்மையான லட்சியத்திற்காக வாழ்ந்து, தேவைப்பட்டால் அதற்காகவே மடி.

அடுத்து...?

கருத்துகள் இல்லை: