24 அக்., 2009

இன்று படித்தவை-6: அக்டோபர் 24, 2009

6. "The Story of My Experiments with Truth": An Autobiography of Mahatma Gandhi (Published by Navajivan Publishing House, Ahmedabad).

காந்தி மகான் நான் வழிபடும் தெய்வங்களுள் ஒருவர். இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் அவரது எழுத்துக்களின் தொகுப்பை (99 தொகுதிகள்) முழுமையாகப் படித்து, அம்மகானை இன்னும் சரியாகப் புரிந்துகொண்டு, அந்த இன்பத்தை இங்கே உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் கனவு.

சத்திய சோதனையாக தமிழில் வெளிவந்துள்ள இந்த நூலை அதன் ஆங்கில வடிவில் ஏற்கனவே ஒருமுறை படித்திருக்கிறேன் என்றாலும், மீண்டும் தினமும் சில பக்கங்கள் வீதம் ஆழமாகப் படித்துவருகிறேன்.

இன்று வாசித்தது இந்நூலிற்கு அவர் எழுதிய நான்கு பக்க அறிமுகம். இதில் புரிந்து கொண்டது, என் மனதில் படிந்தது:

தன்னையறிதல் என் லட்சியம். அதாவது இறைவனைக் காணல்; முழுமை பெறல். கடந்த முப்பது ஆண்டுகளாக இதையே நினைத்து, ஏங்கிப் போராடி வருகிறேன். நான் இயங்குவது, வாழ்வது இதற்காகவே. நான் பேசுவது, எழுதுவது அனைத்துமே இந்த இலட்சியத்திற்காகத்தான் .

என்னுடைய சோதனைகள் வெளிப்படையானவை. என்னால் செய்யமுடிந்தது எதையும் அனைவரும் செய்யமுடியும் என்று நான் நம்புகிறேன். ...

மதத்தின் உயிர்நாடி தூய்மையே.

சத்தியமே மேன்மையான தத்துவம். அதில் பல உயரிய தத்துவங்கள் உள்ளடக்கம். வாய்மை, தூய்மை, மெய்ம்மை - இவை மூன்றும் இணைந்ததே சத்தியம், உண்மை.

இறைவனை பலர் பலவிதமாகக் காண்கின்றனர். நான் சத்தியத்தை - உண்மையை இறைவனாக வழிபடுகிறேன். என்னைப் பொறுத்தவரை 'சத்தியமே கடவுள்'. சத்தியத்தின் மறுவடிவம் அஹிம்சை. அஹிம்சை சத்தியமும் வேறுவேறு அல்ல.

அடுத்து...?

கருத்துகள் இல்லை: