10 நவ., 2009

பாகனேரி தேர்த் திருவிழா

பாகனேரி சிவன் கோவில்

திருவிழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் மகிழ்ச்சி என்று எண்ணியிருந்தேன். பொதுவாக எனக்கு சிறுவயதிலிருந்தே திருவிழாவில் கலந்துகொள்வதில் ஈடுபாடு இல்லை. பாகனேரி தேர்த்திருவிழாவில் ஒரு சாதாரண பார்வையாளனாக கலந்துகொண்டு, பார்த்ததும், கேட்டதும் அந்த எண்ணத்தை மாற்றியது. மக்கள் எவ்வளவு உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்! உற்றார் உறவினருடன் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்!!

திருவிழா, தொழில், வேலை என்று எங்கெல்லாமோ சிதறிப்போனவர்கள் ஒன்றுகூடும் நாளாகவும் அமைவதைக் கண்டேன். பிரிந்த நண்பர்கள் ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியுடன் உரையாடுவதைக் கண்டேன்.

அங்கே எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

பாகனேரி சிவன் கோவிலும், நிலையில் நிற்கும் தேரும்

நிலையில் தேர்



நிலையில்
நிற்கும் தேர் முன்

தேர் நகர ஆரம்பித்துவிட்டது





தேர் உலா

திருவிழா என்றால் பலூன் இல்லாமலா!



குழந்தைகளின் குட்டித்தேர்

(குறிப்பு: திருவிழா நடந்தது ஜூலை ஐந்தாம் நாள். பிறகு பதியலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்; பிறகு முற்றிலுமாக மறந்துவிட்டது. நேற்று இரவு என் ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கையில் கண்டதும், இன்று முதல் வேலையாக என் வலைப்பூவில் பதிய முடிவு செய்தேன்.)

2 கருத்துகள்:

Paganeri சொன்னது…

தங்களது பதிவைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்..நான் பாகனேரியை பற்றி வலைத்தளத்தில் பார்ப்பது இதுவே முதன் முறை..

அதுவும் அருமையான படங்களுன் !

SURI சொன்னது…

நன்றி நண்பரே!