17 நவ., 2009

கருத்துக்கள்-16: உழைக்காமல் உண்பதில்லை!


இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பெரியவர், சிறியவர், குழந்தைகள் பிச்சை எடுப்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம். மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏதோ சில்லறையைப் போட்டுவிட்டு மறந்துவிட முயற்சிப்போம், ஒருவகையான குற்ற உணர்வோடு.

சென்ற முறை இராமேஸ்வரம் செல்லுகையில், இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். பனை ஓலை விசிறி, பனை ஓலை கிலுகிலுப்பை வேண்டுமா என்று ஒவ்வொரு இரயில் பெட்டியாகத் தேடித் தேடி விற்றுக்கொண்டிருந்தாள்.

சிரித்த முகத்தோடு, பொறுமையாக, குறைந்த விலையில் கலைநயம் மிக்க பொருட்களை விற்று, வாழும் அந்தப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தப் பாட்டியிடம் ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டதும் வெட்கம் வந்துவிட்டது. இரண்டு விசிறி பத்து ரூபாய், இரண்டு கிலுகிலுப்பை பத்து ரூபாய்! கிலுகிலுப்பை வைத்து விளையாடும் வயதில் வீட்டில் யாரும் இல்லாதிருந்தபோதும், நாங்கள் கிலுகிலுப்பைகள், விசிறிகள் வாங்கினோம்.

இந்தத் தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும். வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்றிருக்கும் அந்தப் பாட்டியை நாம் அனைவருமே, குறிப்பாக, நம் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

3 கருத்துகள்:

kovai sathish சொன்னது…

சுருக்கமான முகம்....
சுருக்கமில்லா மனம்..!!??
நெஞ்சை பிழியும் உண்மை..தோழா..!!

kovai sathish சொன்னது…

சுருக்கமான முகம்....
சுருக்கமில்லா மனம்..!!??
நெஞ்சை பிழியும் உண்மை..தோழா..!!

SURI சொன்னது…

நன்றி நண்பரே!