20 ஏப்., 2010

எனக்குப் பிடித்த கவிதை-60: பிரச்னை தீர...

சிறு வயதில்
கசாயத்தை
ஒரே மூச்சில் குடித்து
உடனே
டம்ளரைத் தலைகீழாகக்
கவிழ்த்து வை
அப்போதுதான்
நோய் தீரும்ன
மருந்தை முழுதாகக்
காலிசெய்ய
வழி செய்வாள்
என் தாய்.
இப்போது
பெயரை மாற்று
என்னை மாற்று
கல்லை மாற்று
திசையை மாற்று
பிரச்னை தீருமென
என்னைக்
கவிழ்த்துவிடுகிரார்கள்!

- ஞானராஜ் செல்லத்துரை, ஆனந்த விகடன், 10.3.2010.

நன்றி: திரு ஞானராஜ் செல்லத்துரை மற்றும் ஆனந்த விகடன்.

கருத்துகள் இல்லை: