20 ஏப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-102:

பிரபஞ்சத்தையே உங்களுடையதாக ஆக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல், தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே உங்களுடையதாக்கிக் கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப் படுத்திக்கொள்வதில் சந்தோஷப் படுகிறீர்கள்.

இந்த பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும், அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும், கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும், மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.

- 'சத்குருவின் ஜென்னலில் இருந்து ' , ஆனந்த விகடன், 10.3.2010.

நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் ஆனந்த விகடன்.

கருத்துகள் இல்லை: