26 ஜூலை, 2010

யோக சித்தி-33: உலகுயிர்-4

பெண்ணின்றி  ஆணில்லை;  ஆணின்றிப்  பெண்ணில்லை;
எண்ணிருவர்  சேர்ந்தே  இகம்.  

இறை இயற்கை, சிவம் சக்தி, முதல்வன்  ஆணை,  பரம்பொருள் பராசக்தி என்று தெய்வத் தத்துவங்கள் இனிபிரியாத  இரண்டாயிருக்கின்றன.  அதுபோலவே,  உலகிலும் எல்லாத்  தோற்றங்களும்  ஆண்-பெண்ணாக  விளங்குகின்றன.  ஆண்பெண்  என்னும்  இரண்டு தத்துவங்களும்  கூடித்தான்  இவ்வுலக  வாழ்வு  நடக்கிறது.  பென்னில்லாவது  ஆணாவது,  ஆணில்லாது  பெண்ணாவது  உண்டாவதில்லை.  இரண்டும் பிரிந்தால்  வாழ்வுமில்லை; உலகுமில்லை.   

கருத்துகள் இல்லை: