30 ஆக., 2010

சூரியின் டைரி-28: அருள்மிகு கோகுலவினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

உ 
ஓம் சக்தி

நேற்று, ஆகஸ்ட் 29ம் நாள், ஞாயிற்றுக் கிழமை காலை கோட்டையூர் அருள்மிகு கோகுலவினாயகர்-அருள்மிகு நாகவல்லி அம்மன் கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.  கோட்டையூர் பேருந்து நிறுத்தம் நகர சிவன் கோவில் அருகில் உள்ளது.  அங்கிருந்து ஸ்ரீராம் நகர் செல்லும் சாலையில் வலது புறம் அமைந்துள்ளது தெற்கு ஊரணி.  அதன் மேல் கரையில் அருள்மிகு சாஸ்தா ஆலயத்திற்கும், அருள்மிகு இராஜகணபதி  ஆலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.   

இறையருளால் இந்த கும்பாபிஷேகத்தைக்  காணும் இனிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வமயம் எடுத்த புகைப்படங்களை கீழே பதிவு செய்துள்ளேன்.

எனது மாமா  திருவாவடுதுறை ஆதீனத்தில் நீண்ட காலம் பணி புரிந்தவர். ஆலயப் பராமரிப்புப் பொறுப்பில் இருந்தவர்.  நிறைய கோவில்கள், குடமுழுக்குகள் பார்த்தவர்.  செட்டிநாட்டுப் பகுதியில் ஆலயப் பராமரிப்பு, குடமுழுக்கு ஏற்பாடுகள், யாகசாலை அமைப்பு போன்றவற்றின் சிறப்பை மிகவும் போற்றி, புகழ்ந்துரைப்பார் அவர்.   இந்த ஆலயம், யாகசாலை ஆகியவற்றைப் பார்த்தபோது எனக்கு அவரது நினைவு வந்தது.








அருள்மிகு கோகுலவினாயகர்-நாகவல்லி அம்மன் ஆலயம்

யாகசாலை


யாகசாலையின் எழில்மிகு தோற்றம்  மற்றொரு கோணத்தில்

குடமுழுக்கு விழாவைக் காண வந்திருந்த அடியார் கூட்டம்

அருள்மிகு இராஜகணபதி ஆழத்தின் முன்புறம் மெய்யடியார் கூட்டம்

விநாயகப் பெருமானின் வடிவான யானையை வேடிக்கை பார்க்கும் சிறுவர் கூட்டம்

அருள்மிகு கோகுலவினாயகர் ஆலயக் கோபுரம் குடமுழுக்கிற்குத் தயார் 







யானை முன் செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க  சிவாச்சாரியார்கள் அழைத்துவரப்படுகின்றனர்.

சிவாச்சாரியார்கள்  குடமுழுக்கிற்காக கோபுரத்தில் ஏறுகின்றனர்

ஆலயத்தைச் சுற்றிலும் குடமுழுக்கைக் காண வந்த மெய்யடியார் கூட்டம்

ஸ்ரீ கோகுல விநாயகர் கோவிலிலிருந்து தெற்கு ஊரணி - ஒரு காட்சி


ஓம் ஏக தந்தாய வித்மஹே 
வக்ர துண்டாய தீமஹே 
தன்னோ தந்திப்  பிரசோதயாத்!
 ஓம் ஸ்ரீ மஹா கணபதயே  நமஹ!!  

சர்வ மங்கள மாங்கல்யே சிவே 
சர்வார்த்த சாதகே த்ரயம்பகே 
கௌரி நாராயணி  நமோஸ்துதே!

கருத்துகள் இல்லை: