26 ஜூலை, 2011

கருத்துக்கள்-24: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

... மாநிலக்  கல்வித்  திட்டத்தை  அப்படியே  தூக்கிவைத்து, இதுதான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என அறிவித்துவிடவில்லை.  சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தை எந்த அடிப்படையில் தயாரிக்கிறார்களோ, அதே தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தேசியக் கலை திட்டத்தின்படிதான் சமச்சீர் கல்வி பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.    ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், பலகலைக் கழக, கல்லூரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எனத் திறமை, தகுதி வாய்ந்தவர்கள்தான் இந்தப் பாடத் திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள்.  தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. 'ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப பாடங்கள் உருவாக்கப்படவேண்டும்' எனும் குழந்தை மனநல நிபுணர்களின் கருத்தையும் விட்டுவைக்கவில்லை.  மாணவர்கள் படிப்படியாக, சீரான வளர்ச்சிப் போக்கில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் வகையில், புதிய முறையை உருவாக்கினோம்.  இதனால், அந்தந்த வயதுக்கு மீறிய பாடச் சுமை இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், புதிய மதிப்பீட்டு முறை சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், கேள்விகளுக்குப் பதில் எழுதும் முறையை மாற்றி, படித்த பாடத்தில் உள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளைச் சொல்லக்கூடிய முறை சேர்க்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாணவனின் ஆளுமைத் திறனையும் வளர்க்கக் கூடிய முறை இது... 

-  பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

நன்றி:  ஜூனியர் விகடன், ஜூலை 27 , 2011

கருத்துகள் இல்லை: