29 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-86: அப்பா, அன்புள்ள அப்பா -1


அப்பா, அன்புள்ள அப்பா -1

பதினாறு வயதுப் பையன்
பை நிறைய காய்கறிகளை
வாரச் சந்தையில் வாங்கி
(அது ஒரு வசந்த காலம்)
பொய்விலை சொல்லி
கமிஷன் அடித்தான் வீட்டில்.

பிரிதொருநாள்
அப்பாவுடன் சந்தை சென்று
காய்கறிகள் வாங்கியவன்,
(அட, கமிஷன் போச்சே!)
அம்மாவிடம் அப்பா
விலைகளை யெல்லாம்
குறைத்துச் சொல்வது பார்த்து
குழம்பிப் போனான்

இன்று அவன் மனைவி,
“அட இதுக்குப் போயா
இந்தவிலை கொடுத்தீர்கள்?!”
என கேலி பேசும் போது,
அப்பாவின் தந்திரம்
அவனுக்குப் புரிகிறது.

கருத்துகள் இல்லை: