28 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-85: மௌனம்

மௌனம்


மொழி
கண்களில் பிறக்கிறது;

கண்மொழி 
எல்லை தொடும் போது
உடல் மொழி உதவுகிறது;

உடல்மொழி போதாத போது
சொல்லும், பின் எழுத்தும்
சரியாய்ச் சொல்லும்;

உரைநடை தயங்கும் போது
கவிதை கை கொடுக்கும்;

கவிதை விழிக்கும் போது
இசை எளிமையாய்
இனிமையாய்ச் சொல்லும்;

இசை தாண்டி
தொடுமொழி செல்லும்;

அன்பு செய, நன்றி நவில
இத்தனை மொழிகள்
இருந்த போதிலும்

அனைத்தும் தாண்டி
முழுமொழி தேட
விடையாய்க் கிடைப்பது
மந்திர மௌனம்.

கருத்துகள் இல்லை: