13 ஜன., 2013

சூரியின் டைரி-62: தென்றலாய் வருடியவை – நீர் ஆதாரம் இல்லாமல், இரசாயன உரங்களோ, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல், விவசாயம்


சூரியின் டைரி-62:  தென்றலாய் வருடியவை நீர் ஆதாரம் இல்லாமல், இரசாயன உரங்களோ, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல், விவசாயம்

தினமலர் 2013 ஜனவரி பதினொன்றாம் நாள் இதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி மட்டும்.

நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் சின்னசாமி:

.....

இரண்டு ஏக்கர் அளவில் சிறு குட்டை வெட்டி, மழை நீரை தேக்கி, எழுபது ஏக்கர் நிலத்தில் நான்கு கிணறுகளை வெட்டி, குட்டியயில் தேங்கிய நீரை, பிவிசி பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், இருபது ஆழ்துளை கிணறுகல் அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்கிறேன்.

இனிப்பு சுவையுடைய அறுபது தாய்லாந்து புளிய மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன்.  ஒரு மரத்திலிருந்து ஆண்டிற்கு, 15,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.  கோ-3 ரக சப்போட்டா கன்றுகளை சீரான இடைவெளியில் நட்டதில், மரத்திற்கு, 100 பழங்கள் வீதம், நன்கு காய்க்கின்றன.

என்னிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும், கோழிப் ப்ண்ணையிலிருந்து பெறும் கழிவுகளையும், கல் உப்பு, காய்ந்த சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன்.  வேப்ப மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறேன்.

ஊடு பயிராக பீட்ரூட், கத்தரிச்செடி, மிளகாய் செடி, வெண்டை என பயிரிடுகிறேன்.  வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும், கீரை வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறேன்.


இரசாயன உரங்களோ, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல், நீர் ஆதாரம் இல்லாத இடத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்துவரும் பல்லடம் திரு சின்னசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி: தினமலர் நாளிதழ்

கருத்துகள் இல்லை: