30 டிச., 2015

சூரியின் டைரி-66: CREATE PUBLIC AWARNESS Group in my Facebook

எனது முகனூல் பக்கத்தில் புதிதாக ஒரு குழுவை ஆரம்பித்துள்ளேன். இதன் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது. எனவே இதற்கு CREATE  PUBLIC  AWARNESS  என்று பெயர் சூட்டி நிறைய அரசு, அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கினால், அலட்சியப்போக்கினால், மக்களின் அறியாமையால் நடைபெறும் கொடுமைகள் பற்றி பதிந்துவருகிறேன்

நல்லதொரு மாற்றம் நிகழ, முதற்படி விழிப்புணர்வு. விழிப்புணர்வு ஏற்பட்டபின் செயல்படும் உத்வேகம் பிறக்கவேண்டும். செயல்படாமல் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.  

சென்னை  நகரம் வெள்ளத்தில் மூழ்கி பட்ட அவஸ்தையை நேரடியாகவோ, டிவி மூலமாகவே, செய்தித்தாட்கள் மூலமாகவோ அனைவரும் பார்த்திருக்கலாம்

வருடாவருடம்  நிகழும் இந்த அவஸ்தை பற்றி போதிய ஏரி குளங்களை தூர்வாறி, கரைகளை உயர்த்தி, மழை நீர் வடிகால்களை சீரமைக்காததாலும் மக்கள் பட்ட துயர், வீணான குடிநீர், பொதுச் சொத்து மற்றும் தனிப்பட்ட இழப்பு சொல்லிமுடியாது

தனிப்பட்ட நபர்களை தாக்காமலும், அரசியல் வாடை வீசாமலும், எச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். அது மட்டுமல்ல, ஒரேயடியாக எதிர்மறையாக இல்லாமல், சில மக்களுக்குப் பயன்படும் நல்ல செய்திகளையும் பகிரிந்து கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: