24 செப்., 2017

நெல்லையப்பன் கவிதைகள்-88 கலி காலம்

95. கலி காலம்

நல்ல தலைவர்கள்
நாட்டு மக்களை
அரசியலுக்கு அழைத்தது
அந்தக்காலம்.
.
தொண்டர்கள் திரண்டு
தெண்டனிட்டு தங்கள்
தலைவரை இழுப்பது
இந்தக்காலம்.
.
இரவு பகல் பாராது
தலைவர்களெல்லாம்
பொதுப்பணி செய்தது
அந்தக்காலம்.
.
வெற்றி வாய்ப்பிற்கு
காலம் கனிய காத்திருந்து
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வருவேனென்பது
இந்தக்காலம்.
.
மூழ்கிக் கொண்டிருப்பவன்
கதறி அழைக்கிறான்
கைதூக்கிவிட தலைவருக்கு

காலம் இன்னும் கனியவில்லையாம்!

கருத்துகள் இல்லை: