30 டிச., 2019

நேர்காணல்-10: எழுத்தாளர் பூமணி


எழுத்தாளர் பூமணி நேர்காணல்

8,090 பார்வைகள்•18 மே, 2018
“Karuppu கருப்பு”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். தந்தை முகம் அறியாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். விவசாயக் குடும்பம். கல்லூரிப் பருவத்திலேயே இலக்கியத் தளத்தில் எட்டுவைத்தவர். பலரைப்போல் கவிதையில் தொடங்கி சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, திரைப்படம் எனத் தளத்தை விரித்துக்கொண்டவர்.

தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால்அதில் இவருக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதைக் கேட்கலாம்.

சின்னத் திரைக்காகச் சில கதைகளையும் பேனாமுள் தயாரிப்புப் பற்றிய ஆவணப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். தேசிய திரைப்பட வளர்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அது தமிழக அரசு விருது பெற்றது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டது.

இவர் சாகித்ய அகாடெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.
----------------
4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது.
நேர்க்காணலின் எழுத்து வடிவமும் இருக்கிறது. இணைப்பு கீழே கமெண்ட்டில் தரப்படும்.

நேர்க்காணல் கண்டவர் - ரெங்கநாதன்
படத்தொகுப்பு - புகழேந்தி
போட் டோஷாப் - ரமேஷ் பெருமாள் 

கருத்துகள் இல்லை: