29 செப்., 2020

வேதனைக்குரல்

தமிழ்நாட்டில் பிறந்து...
தமிழ்நாட்டில் வளர்ந்து... 
தமிழ்நாட்டில் தொழில் செய்து... 
தமிழ்நாட்டில் சேமித்து 
தமிழ்நாட்டில் இருக்கிற பேங்க்ல பணத்தை போடவோ எடுக்கவோ தமிழைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர்கள் அடுத்தவரின் கையை எதிர்பார்த்திருப்பது இந்த அரசுக்கு ஒரு கேவலமாக தெரியவில்லையா..?

 சொந்த மண்ணில் செயல்படும் வங்கிகளில் எல்லாமும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்குமென்றால் அப்புறம் தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கதி என்னதான் ஆவது...

ஒருவன் ஒரு மொழியை மட்டுமே.. அதுவும் தாய்மொழி மட்டுமே எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருப்பது தேசிய குற்றமா..?

தமிழ்நாட்டில் செயல்படும்  வங்கிகளிலிருந்து 
இந்தியை நீக்கு.. தமிழை சேர்!

பதிவு: கருப்பு கருணா
=========
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன தமிழர்களால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை. கனரா, சிண்டிகேட் வங்கி முதலியன கர்நாடகாவிலும் ஆந்திரவங்கி ஆந்திராவிலும் உருவானவை. மத்திய அதிகாரம் இவற்றை எல்லாம் இந்தி வங்கிகளாக் கைப்பற்றி மாற்றுவது தவறு.
கூட்டாட்சிமுறை கெடுகிறது. மக்கள் தம் சொந்த மொழியில் இயங்க முடியாவிட்டால் மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?

நன்றி :
கருப்பு கருணா
மற்றும் 

கருத்துகள் இல்லை: