29 நவ., 2020

இலக்கிய இன்பம்

             லார்ட்​ பைரன்                              காதல் கவி​தை

 இது​பைரன்​கேம்ப்பிரிட்ஜ்
பல்க​லைக்கழகத்தில்படித்த​போதுஎழிதியதாகஇருக்ககூடும்
என்பதுவிமர்சகர்களின்
அபிப்பிராயம்... இதுஅவரு​டைய  வாழ்க்​கையில் நடந்த காதல் ​தோல்வி,,  ஒரு​வே​ளை  இப்படிஅழகியகவி​தையாக
வடி​வெடுப்பதற்​கேகூடஅது​தோல்வியில்முடிந்திருக்கலாம் என்றுகூட​தோன்றுகிறது)

(கவி​தையின்கரு)

காதலர்கள்  இருவரும்  கண்ணீருடன் பிரிகிறார்கள் சூழ்நி​லை​யே  காரணம் ..கால​மோ  பறக்கிறது ​ ,இறக்​கைகட்டிக்​கொண்டு... ஆனால்இதயங்கள்மட்டும்காதலின் இரணங்க​ளைச் சுமந்து​கொண்டு  எங்​கோ உயிர்த்திருக்கின்றன 
நிI​னைவுகளினால்  மட்டு​​மே...

.கால​மே மீண்டும் ஒருசந்திப்​பை  தருகிறது...அ​தை அது கொடுக்காம​லேகூடஇருந்திருக்கலாம்   அவன் உறவுக​ளோ  ​வேறுஉறவுகளுடன் காலத்தால்..... அவள் உற​வுக​ளோ விதியுடன் ​வேறு ​கோலத்தில்..ஊ​ரெல்லாம் உலக​மெல்லாம் அவ​ளை​ அ​டையாளம் காணும் அளவுக்கு
அவள் வளர்ந்திருக்கிறாள் ஆனால் விதியின் பா​தையில்  அவ்வளவுதான்அவ​ளைப்பற்றி ​சொல்வதற்கு ....

மீதி​யை நீங்க​ளே புரிந்து​கொள்ளுங்கள்....அ​​நேக  நாக்குகள் அவ​ளைப்பற்றி நன்கறிந்ததாய்அவரிட​மே​சொல்ல , அவ​​ளைப்பற்றி நன்கறிந்த அவ​ருக்​கோ​மெளனித்திருப்ப​தைதவிர​வேறுவழியில்​லை ..
க​டைசிசந்திப்பும் இந்த புதியசந்திப்பும் மாறி மாறி​கொண்டுவந்து​சேர்க்கிறது
இந்தகவி​தை​யை...

நாம்   இருவரும்  பிரிந்த ​போது

 (WHEN WE  TWO PARTED)

பிரிவதற்காக​வே அ​மைந்தத​தோ
 நம்க​டைசி  சந்திப்பு
அந்தசந்திப்புக்கு நம்முறிந்த இதயங்க​ளே​சாட்சியாகஇருந்தன
அப்​போது.....

உன்முக​ம்  ​வெளுத்து  
தா​டை​  குளிர்ந்து
உன்க​டைசி முத்த​மோ
உ​றைந்து ​போயிருந்தது
மரித்தஅ​மைதியில்....

உன்விழகளில்அன்று வழிந்​தோடியகண்ணீரில்
அப்​பொழு​தே  எழுதப்பட்டிருந்திருக்கிறது
எனது இந்நா​ளைய விதி​அதைஎவ்விதம்நான்வாசிக்காமல்தவறவிட்​டேன்அன்று?

ஒரு  நாள்  ​காலைஎன்கண்களில்
துளிர்த்திருந்தது
ஒரு ஒற்​றைப்பனித்துளி

அ​தை என்விரல்கள்உணர்ந்த​போது ஏற்கன​வே
அது உ​றைந்து​போயிருந்தது

நான் காணும் இந்தவீதி​யெங்கும்
உன்​பெய​ரே உச்சரிக்கப்படுகிறது...

இ​தேவீதிதான்
உன்அத்த​னைஉறுதிகளும்
காற்றில்பறக்கவிடப்பட்ட
இ​தேவீதிதான்....

உன்​​பெய​ரை​யேஒவ்​வொருவரும்
என்முன்உச்சரிக்கிறார்கள்
உன்​னைஎனக்குஎன்று​மே​தெரியா​​தென.
அவர்கள் நி​னைக்கிறார்கள்....

நான்​சொல்லநி​னைக்கி​றேன்
என்​னைவிடஉன்​னை
உன்​மேலானஉன்​னை
உன்முழுஉன்​னை
யார்நன்கறிவார்கள்என்று

ஆனாலும் உதட்டி​லே​யே
நீர்க்குமிழிகளாய்
என்​மெளனங்க​ளைஉ​டைத்துக்​கொண்டு.....
அ​மைதியில் துடிக்கி​றேன்

மனதுக​ளை  அவிழ்ப்பது
உயிர்ப்பற​வை​யை  நிரந்தரமாய்
வானில் பறக்கவிடுவது
என்ப​​தையும் கூடநானறி​வேன்....

உன் இதய​மோ
நம் காதலின் ஆத்மா​வை
மறந்திருக்ககூடும்
உன்விருப்பப்படி​யேகூட
ஆனால் என் இதய​மோ?.....

முன்​பெல்லாம்
இரகசியமாய் நாமிருவரும் சந்தித்​தோம்
காதல்வளர்ப்பதற்கு

இன்​றோ நா​னொருவ​னே
தனி​மையில் மரிக்கி​றேன்
அந்தகாதல் இரணங்க​ளை எனக்குள்​ளே​யே
​ க​ரைப்பதற்கு
எனக்குள்​ளே​யே  !...

         தங்​கேஸ்

நன்றி :

கருத்துகள் இல்லை: