5 டிச., 2007

மௌனம்

வார்த்தைகளில்லாத புத்தகம் மௌனம்.
ஆனால்வாசிக்க வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.
மௌனம் என்பது வெளிச்சம்.
நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.
மௌனம் என்பது இருட்டு.
எல்லா கர்வங்களையும் இதற்குள் புதைக்கலாம்.
மௌனம் என்பது மூடி.
இதைத் தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும்
இதற்குள் பூட்டி வைக்கலாம்.
மௌனம் என்பது போதி மரம்.
இதுவரை உலகம் சொல்லாத
எல்லா உண்மைகளையும் நமக்கு போதிக்கும்.
மௌனம் என்பது தவம்.
இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
மௌனம் என்பது வரம்.
நம்மிடம் இருந்து நாமே பெறுவது.
இன்பம் துன்பம் இரண்டையும்
மௌனம் கொண்டு சந்தித்தால்
இதயம் எப்போதும் இயல்பாக இருக்கும்.
இதழ்களை இறுக மூடி இறங்குவோம் நமக்குள் நாம்.
மௌனம் என்பது கருவி.
அது குறிக்கோளாகாது.
மௌனம் என்பது வாள்.
பேச்சு உறை.
மௌனம் என்பது சொர்க்கம்.
பேச்சு நரகம்.
மௌனம் ஒற்றுமையை ஊட்டும்.
பேச்சு வேறுபாடு வளர்க்கும்.

நன்றி : இயற்கை மருத்துவம், அக்டோபர் 2000

கருத்துகள் இல்லை: