6 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-9: "என்ன பெயர் வைக்கலாம்?"

என்ன பெயர் வைக்கலாம்?

பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்க வேண்டும் --
ஜாதியின் வாசனை மூக்கைத் துளைக்காமல்,
மதத்தின் மகிமையை முரசரையாமல்,
தாய்மொழிக்கு வால் பிடிக்காமல்,
'இஸம்' எதையும் எடுத்துக் காட்டாமல்,
வெறும் இந்தியனாய்த் தயாரிக்க,
பெயரொன்று வேண்டும்.
மொழியும், மதமும்,
மதம் சார் ந்த சின்னங்களும்,
இன்ன பிறவும்,
உள்ளாடைகளைப் போல் அவசியமானவை --
ஆனால் அவை வெளியே தெரிய வேண்டியதில்லை.
எனவே குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்?

கருத்துகள் இல்லை: