5 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-8: "காண்ட்ராக்ட் கடவுள்கள்!"

காண்ட்ராக்ட் கடவுள்கள்!

கல்வி கற்கும் கடவுள்களை
காண்ட்ராக்டில் நியமிக்கிறார்களாம்!
நான்கு ஆசிரியர்கள் தேவையுள்ள
பள்ளியிலிருக்கும் ஒரே ஆசிரியர் -
நான்முகக் கடவுள்.
ஆணுக்கும் பெண்ணுக்குமாய்
வகுப்பெடுக்கும் ஒரே ஆசிரியர் -
அர்த்தநாரீஸ்வரர்.
அனைத்து பாடங்களுக்கும்
ஒரே ஆசிரியர்தான் என்றால்
சர்வ நிச்சயமாய் அவர்
சர்வேஸ்வரன்தான்.
அரசுப் பள்ளிக்கு
மாணவர்கள் வந்தாலும்
சரஸ்வதி தேவி மட்டும்
சத்தியமாய் வர மாட்டாள்!

கருத்துகள் இல்லை: