10 செப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-20: "லாரி ஓட்டுனர்"

நான்கு சக்கரங்களை
ஒரு சக்கரத்தால்
ஆட்டுவிக்கும்
சக்கரவர்த்தி!

இவர் வாழ்க்கை
இவர் கையில்!
மூலக்கதையறிய
நதிமூலம், ரிஷிமூலம்
தேவையில்லை,
தொழில் மூலம் வந்ததது!

செல்லும் இடமெல்லாம்
பெண்கள் கிடைத்தாலும்
மணம் முடிக்க ஒரு பெண்
கிடைப்பதரிது!

நியாமாகப் பார்த்தால்
இன்சூரன்ஸ் பிரிமியத்தை
இவருக்காகக் கட்டவேண்டியது
ரோடு கான்ட்ராக்டர்கள்தான்!

லோடு ஏற்றிக்கொண்டு
கிளியுடன் வலம் வருவார்;
உஷாராக இல்லையென்றால்
தெருவில் நிற்க வேண்டியதுதான்!

பின்னாலும், உள்ளேயும்
சரக்கேற்றுவார்;
தண்ணியால்
கஷ்டப்படுவார்!

டீயும், டீசலும்
உயிர்த் திரவங்கள்;
ஒரு திரவத்தில்
சம்பாதித்ததை
இன்னொரு திரவத்தில்
செலவிடுவார்.

மாமூல் வாழ்க்கை பாதிக்கும் -
ஏற்றவும், இறக்கவும்
சோதனைச்சாலை கடக்கவும்
மாமூல் வழங்காவிடில்.

எந்த ஊர் போனாலும்
ஊருக்கு வெளியேதான் உணவு;
ஹைவேயும், எச் ஐ வியும்
பிரிக்க முடியாதவை;
கண்டத்திலிருந்து தப்ப
காண்டம் வேண்டும்!

கருத்துகள் இல்லை: