17 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-39: "தகுதிகள்"

பலமுறை
விளம்பரம் செய்தும்,
நேர்முகத் தேர்வுக்கு
அனைவரையும் அழைத்தும்,
பத்து இடங்களுக்கு
ஆயிரம் பேரை பரிசோதித்தும்,
ஆறு இடங்களுக்கே
ஆட்கள் கிடைத்தார்கள்!

எந்த ஒரு வேலைக்கும்
தகுதியில்லாமல் இளைஞர்களை ,
தயாரிக்கும் சேவையினை,
தப்பாமல் செய்வது
நம் பல்கலைக்கழகங்கள்.

வெள்ளைக்காரர்களை
விரட்டிவிட்டு,
மெக்காலே பிரபுவின்
கல்வியை மட்டும்
பிடித்துக் கொண்டோம்.

உதவியாளர்களை மட்டும்
உற்பத்தி செய்ய
உருவான திட்டம்
வேறெப்படி இருக்கும்?

தெரியாத மொழியில்
புரியாத பாடத்தை,
பிடிக்காத ஒருவர்
விருப்பமின்றி நடத்த,
மாணவர்களின் கதி?

இங்கிருப்பது
வேலையில்லாத்
திண்டாட்டமல்ல ;
வேலைக்குத்
தகுதி இல்லாதவர்களின்
திண்டாட்டம்தான்!

கருத்துகள் இல்லை: