18 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-40: "பக்கத்து வீட்டுக்காரர்"

நம் வீட்டு "இந்து" பேப்பர்
நமக்கு முன் படித்துவிடுவார்;
நமது வீட்டு டெலிபோன் நம்பர்
அவரது விசிட்டிங் கார்டில்;

எதிர்வீட்டு கரண்ட் பில் கட்ட
நமது வாஹனத்தில் விரையும்
நல்ல சமூக சேவகர்;
இரவல் வாங்கியதை மறக்கும்
செலக்டிவ் அம்னீஷியாக்காரர்;

மாதம் ஒரு காரணம் சொல்லி
நிதிவசூல் செய்யும்
நிகரற்ற நன்கொடை நாயகன்;
பெண்கல்வியை மதித்து
அவர் பெண் படிப்பிற்காக,
நம் வீட்டில் டி.வி. பார்ப்பார்;

உரிமையோடு "காபி" குடித்து,
கைப்பக்குவம் சிலாகிக்கும்
மனோதத்துவ நிபுணர்;
சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர் -
நான்கு பக்கமும்
பக்கத்து வீடுகள் இருக்கின்றதே!

கருத்துகள் இல்லை: