4 மார்., 2009

நெல்லையப்பனின் புத்தகச் சிந்தனைகள்-1:

அச்சேறும் ஒவ்வொரு புத்தகத்தின் பிரதியிலும்
அதனைப் படிக்கப் போகிறவரின் அல்லது
போகிறவர்களின் பெயர் கண்ணுக்கு தெரியாத
மையினால் எழுதப்பட்டு விடுகிறது. வெகு சில
நேரங்களில் மட்டுமே அந்தந்த புத்தகங்கள்
உரியவரிடம் நேரடியாக சென்றடைகிறது.

பெரும்பாலான புத்தகங்கள் உரியவரால்
படிக்கப்பட நீண்ட கால தவமும், பயணமும்
மேற்கொள்கின்றன.

பழைய புத்தகக் கடையில் என் வயதுள்ள
பல புத்தகங்களை நான் வாங்கியிருக்கிறேன்.
அதுபோல கோட்டையூர் நூலகத்தில் பல
புத்தகங்கள் எனக்காக இருபது ஆண்டுகள்
காத்திருந்திருக்கின்றன. ஒட்டிக்கொண்டிருந்த
பக்கங்களை பிரித்தபோது அதை நான்
அறிந்துகொண்டேன்.

வெளியூர் சென்ற இடங்களில் பழைய
புத்தக கடைகளில் 5 ரூபா வித்தியாசத்தில்
பேரம் படியாததால் கோபப்பட்டு வாங்காது
விட்ட புத்தகங்கள் எத்தனையோ! அப்படி
வாங்காது விட்ட புத்தகங்களுக்காக வருந்தியது
எத்தனையோ!

நான் தொலைத்த பல புத்தகங்களை
நண்பர்கள் வீட்டில் கண்டுபிடித்திருக்கிறேன்.
ஒரு திடீர் ஞானோதயத்தில் என் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த மற்றவர்களின் புத்தகங்களை
அவர்களை தேடிப் பிடித்து...


தொடரும் ...

கருத்துகள் இல்லை: