4 மார்., 2009

இன்று ஒரு தகவல்-21: "மின் செலவை குறைக்க சி.ஃப்.எல். பல்புகள்"

மின்சார சிக்கனத்திற்காக மத்திய அரசு 'பசாத் லாம்ப் யோஜனா' என்ற புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. ரூபாய் எண்பது மதிப்புள்ள சி.ஃப்.எல்.பல்புகள் (Compact Fluorescent Bulbs) அரசு மானியத்தொகையால் பதினைந்து ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் தற்போது விசாகப்பட்டினத்திலும், ஹரியானாவிலும் செயல்படுத்தப்படுகிறது. அதிக வெளிச்சம் குறைந்த செலவில் பெறலாம். தற்போது செலவாகும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலவாகும். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார சிக்கனம் மட்டுமல்லாது, கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுவதும் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.
ஆதாரம்: தினகரன், நாளிதழ், மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 26, 2009.
நன்றி: தினகரன்.

கருத்துகள் இல்லை: