15 ஜூலை, 2009

இன்று ஒரு தகவல்-23: "பசித்திரு, நீண்ட நாள் வாழலாம்!"

அமெரிக்காவில் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் இருபது வருட ஆராய்ச்சிக்குப் பின் ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பசியோடிருப்பது ஆயுளை நீட்டிக்கும். குரங்குகளிடம் இருபது ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சிக்குப் பின், கண்டறிந்த உண்மை இது.

வள்ளலார் 'பசித்திரு', 'தனித்திரு', 'விழித்திரு' என்று சொன்னதில் பல உட்கருத்துக்கள் இருப்பதாகக் கூறுவார் ஆன்றோர். பசி கொல்லாமையின் மேன்மை பற்றி அவர் பல இடங்களில் கூறியிருக்கிறார். குறிப்பாக ஆன்மிக வாழ்வில் ஈடுபட விரும்புவோர் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று இது. பசித்திருப்பது நீண்ட நாள் வாழ வழி வகுக்கும். வயிறு முட்ட உண்பது நோய்க்கு வழி வகுக்கும் என்று இயற்கை மருத்துவமும் கூறுகிறது. ஆரோக்கியமாக வாழ விரும்பும் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய உண்மை இது.

கருத்துகள் இல்லை: