25 ஜூலை, 2009

எனக்குப் பிடித்த கவிதை-52: கவிஞர் முத்துலிங்கத்தின் "கழுதை"

எதுகை மோனை ஓசை நயங்கள்
இலங்கும் கவிதை இனிக்கும் - ஒரு
புதிய கருத்தும் அதற்குள் இருப்பின்
பொலியும் கவிதை நிலைக்கும்

இலக்க ணங்கள் இழந்த கவியை
சிலரின் இதயம் ரசிக்கும் - அது
கலக்கல் சரக்கைப் போல மதிப்பைக்
காலப் போக்கில் இழக்கும்

வரட்டுத் தனத்தில் பிறக்கும் கவிதை
மலட்டுத் தனத்தின் வடிவம் - அதில்
முரட்டுத் தனத்தில் வார்த்தை இருப்பின்
சிறப்புப் பெறுதல் கடினம்

கவிதை நயமும் கருத்தும் திகழும்
கவிதை உயர்ந்த கவிதை - இதில்
எதுவும் அற்றுத் திகழும் கவிதை
கவிதை யல்ல கழுதை!

"முத்துலிங்கம் கவிதைகள்"
212 பக்கங்கள், விலை ரூபாய் 90/-
திருவரசு புத்தக நிலையம்
23 (பழைய என் 13), தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை-600017

கருத்துகள் இல்லை: