25 ஜூலை, 2009

எனக்குப் பிடித்த கவிதை-51: கவிஞர் நா.காமராசனின் "யாத்திரைக்காரன்"

ஏடெடுத்து கவிஎழுதத் தாய் சுமந்தாள் - எனை
ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள்
மூன்றெழுத்து படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என்
மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்.
கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான்
கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை!
கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை
குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை!
நாலு பக்கம்போன 'தெப்பம்' கரை ஏறவில்லை - என்
நாடகத்தில் மூடுதிரை .. சபை கூடவில்லை
தூரதூரம் நான் நடந்தேன் தொடுவானமில்லை - என்
ஆடுபுலி ஆட்டத்திலே கோடுமில்லை - நான்
வசந்தகாலப் பூக்களுக்கும் நிறம் எழுதும்
சித்திரக்காரன் - அடிமை
வாழ்வைவிட்டு வெளிநடப்பு செய்துவிட்ட
யாத்திரைக்காரன்!

கவிஞர் நா.காமராசனின் "காட்டுக்குறத்தி"
136 பக்கங்கள்
விலை ரூபாய் 38/-
திருமகள் நிலையம்
புதிய எண் 16, பழைய எண் 55
வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை ௬000௧௭
தொலைபேசி: 24342899

நன்றி: கவிஞர் நா.காமராசன் அவர்கள் & திருமகள் நிலையத்தார்

கருத்துகள் இல்லை: