7 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-82: திருத்திக் கேட்ட வரம்

பக்தா,
உன்பக்தி மெச்சினேன்.
வேண்டியது கேள்
ஒரு வரம் தருவேன்!


ஆண்டவரே!
என் தேவைகள் அதிகம்
ஒருவரம் போதாதே...


மகனே உன் சமர்த்து;
வேண்டியது கேள்,
வரம் என்னவோ
ஒன்றே ஒன்றுதான்!


யோசித்த பக்தன்
தெளிவு பெற்றான்
தொழுது கேட்டான்-
ஐயனே! என் தொகுதிக்கு
எதிர்க்கட்சிகள் புறக்கணிக்காத
இடைத்தேர்தல் வேண்டும்.


அப்பா வாசம்
முரண்
மலரை தீயிலிட மனம் வருமா?

கருத்துகள் இல்லை: