31 டிச., 2018

வரலாற்றில் சில மைல் கற்கள்-31: டிசம்பர் 31


ரலாற்றில் சில மைல் கற்கள்: டிசம்பர் 31

ஆங்கிலேயர் ஆட்சிக்கான விதை (1599)

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வித்திட்ட தினம் இன்று. இந்தியாவில், வர்த்தகம் மேற்கொள்ளும் தனி உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத் வழங்கிய தினம். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. பிறகு மெல்ல மெல்ல இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள ஆரம்பித்தது.

ஒளிவிளக்கு அறிமுகம் (1879)
அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கே வெளிச்சம் கொடுத்த நாள் இன்று. 1979ம் ஆண்டு இதே நாள்தான் ஒளிவிளக்கை உருவாக்கினார் எடிசன். மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.18 ஆம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது பெரும் கனவாகவே இருந்தது. 1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்.

நன்றி: Patrikai.com

கருத்துகள் இல்லை: