31 டிச., 2018

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-25: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் பிறந்த நாள் இன்று

பிறப்பு: திசம்பர் 311947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) )

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலானஎழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள்நாவலை இயக்குநர் தங்கர்பச்சான்சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

*பெருமைகளும் விருதுகளும்*

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

கனடாவின் இலக்கியத்தோட்டத்தின்2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில்இவருக்கு அளிக்கப்பட்டது

*படைப்புகள்*

*புதினங்கள்*

1977 தலைகீழ் விகிதங்கள்

1979 என்பிலதனை வெயில்காயும்

1981 மாமிசப்படைப்பு

1986 மிதவை

1993 சதுரங்க குதிரை

1998 எட்டுத் திக்கும் மதயானை


*சிறுகதை தொகுதிகள்*

1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்

1985 வாக்குப்பொறுக்கிகள்

1990 உப்பு

1994 பேய்க்கொட்டு

2002 பிராந்து

2004 நாஞ்சில் நாடன் கதைகள்

சூடிய பூ சூடற்க

முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)

கான் சாகிப்

கொங்குதேர் வாழ்க்கை

*கவிதை*

2001 மண்ணுள்ளிப் பாம்பு

பச்சை நாயகி

வழுக்குப்பாறை

*கட்டுரைகள்*

2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை

தீதும் நன்றும்

திகம்பரம்.

காவலன் காவான் எனின்

அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)

அகம் சுருக்கேல்

எப்படிப் பாடுவேனோ?

2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)

*நன்றி: தமிழ் விக்கிப்பீடியா*

*******

இத்தருணத்தில், நான் பெரிதும் போற்றும் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சீரிய சிந்தனையாளருமான திரு நாஞ்சில் நாடன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சகல நலமும் பெற்று, சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை: