தசரத் மாஞ்சி
தசரத் மாஞ்சி பிகார் மாநிலத்தில் தனி ஒரு மனிதனாக ஒரு சிறு உளியையும், சுத்தியலையும் கொண்டு 22 ஆண்டுகள் ஒரு மலையை குடைந்து பல கிராமங்களுக்கு பாதையை உருவாக்கித் தந்தவர். அவரால் தான் இன்று பல கிராம மக்கள் சுலபமாக பயணிக்க முடிகிறது. பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. ஆனால் அவரை எத்தனை பேருக்கு தெரியும். போற்றப்பட வேண்டிய அந்த மனிதருக்கு இறக்கும் தருவாயிலேயே மிக மிக சிறிய வெளிச்சம் கிடைத்தது.
இதே போல் உலகம் முழுக்க பல துறைகளில் பல சாதனைகளை செய்தவர்கள் யாருக்கும் தெரியாமலேயே மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கிறார்கள்.
(ஒரே கட்டுரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டாகப் பதிவாகிறது. காரணம் தசரத் மாஞ்சியின் பெயர் ஹைலைட் படவேண்டும் என்பதற்காக)
நன்றி : திரு. அரிசங்கர் மற்றும் முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக