17 டிச., 2020

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1005: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.

விளக்கம்:

இறைவனுக்கு அன்போடு சமைத்த அமுதத்தை (உணவு) படையல் செய்து பொன்னொளி விட்டுப் பிரகாசிக்கும் அளவிற்கு தூய்மையான விளக்குகளில் தீபத்தை ஏற்றி வைத்து அனைத்து திசைகளுக்கும் தூபம் (சாம்பிராணிப் புகை) காட்டித் தாம் அனுபவிக்கின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் அளிக்கும் அருளாகக் கருதி இன்பமுடனே வழிபட்டு வருபவர்கள் நினைத்த நேரத்தில் இறைவனின் இன்னருளால் முக்தியை எய்துவார்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: