13 ஜன., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1023: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

விளக்கம்:

வில்லின் இரு பக்க நுனிகளும் வளைந்து இளம்பிறை விடிவில் இருக்கும் பிறை (அரை நிலா) குண்டத்தில் இரு நுனிகளிலும் பாம்பு போல் வளைந்து எழுகின்ற அக்னி எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்கும். அப்படி எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கும் சுடரொளி எமது உடலுக்குள் மேருவாக இருக்கும் முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கிறது.

குறிப்பு: வெளியில் செய்யும் பிறை (அரை நிலா) குண்டத்தில் எழும் அக்னியைப் போலவே மானசீகமாக உடலை பிறை குண்டமாக பாவித்து செய்யும் யாகத்திலும் குண்டலினி சக்தி அக்னியாக எழுந்து முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: