17 ஆக., 2021

நூல் நயம் : கற்பனைக்கும் அப்பால் - சுஜாதா

#ஆண்டுவிழா
#முதல்வாரம்

தலைப்பு : அறிவியல்

புத்தகம் : கற்பனைக்கு அப்பால்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 80

முதல் வாரம், முதல் பதிவு குருவணக்கம் குடுக்கணும் அதான் மரியாதை..

புத்தகத்தைப் பற்றி :

1991வது வருஷம் டிசம்பர் மாசம் அறிவியல் சம்பந்தமா ஆசிரியர் தனக்கு தெரிஞ்ச விஷயங்களை கொண்டு எழுதிய கட்டுரை தொகுப்பு தான் இந்த புத்தகம். (வருஷம் நல்லா பாத்துக்கோங்க). ஏன்னா அன்னைக்கு பெருமளவுல செல்போன் பயன்பாடு கூட இருந்திருக்கல.

அறிவியல் என்பது என்னங்கிறதுல ஆரம்பிச்சு தொடர்ந்து, மனித தோற்றம், வளர்ச்சி, சாதனைகள், புலன்கள், மனம் அறிவு இப்டி கண்ணுக்கு புலப்படாத விஷயத்துக்கு கொண்டுபோய், கொஞ்சம் கொஞ்சமா கம்ப்யூட்டர், செல்போன், ரோபோட், work from ஹோம், ESP, மொழி, biology, உலகத்தோட தோற்றம்ன்னு கிட்டத்தட்ட எல்லா ஏரியாவிலும் கைவைக்கணும்னு ஆசைப்பட்டு, கடைசியா கடவுள்கிட்ட வந்து u turn அடிச்சு நிறுத்துறாரு.

எப்பவும் போல அவரோட writing style அட்டகாசம். நம்மள நிறுத்த விடாம வாசிக்க வைக்கும். பதில் இல்லாத கேள்விகளுக்கும் சரி, குதற்க்கமான பதிலுக்கும் சரி, அருமையா சமாளிச்சு அடுத்த பகுதிக்கு தாவிடுறாரு. இதுல அவர அடிச்சிக்க முடியாது.

இதுல ரொம்ப பிடிச்ச கட்டுரைன்னா அது ' நிஜம் என்பது பொய்' தான். ஒரு பொருளின் இருப்பதால் தான் அது திடப்பொருள் ஆகின்றன என்ற கூற்று அது ரசிக்கும்படியா இருந்துச்சு.

ஆச்சர்யம் என்னனா wfh, அப்பறம் எந்திரன் படக்கதைய அப்பவே சொன்னது தான். தீர்க்கதரிசி..

நீங்க எல்லாரும் ஜோதிகா நடிச்ச மொழி படம் பாத்திருப்பீங்க இல்லையா. அதுல ஒரு காதபாத்திரம் வரும், MS. பாஸ்கர். ஹீரோ கிட்ட basics of computer science புக் குடுத்து படிக்க சொல்வாரு. "மார்க் மை words. இன்னும் 10 வருஷத்துல computer தான் நாட்டோட வளர்ச்சிக்கு முக்கியமா பங்கு வாங்கிக்கும்"னு சொல்வாரு. அவரபொறுத்தவரைக்கும் உலகம் 1987லையே நின்னு போயிருக்கும்

இந்த புத்தகம் வாசிக்கும் போது எனக்கு ஆசிரியர் ms பாஸ்கர் தான் நியாபகம் வந்தாரு. அன்றைய காலகட்டத்துல இந்த புத்தகம் வாசிக்கும் போது புதுசா எதையோ நாம தெரிஞ்சுக்கிறதா எல்லாரும் யோச்சிருப்பாங்க. ஆனா இது 2021 இல்லையா. அதனால ஒரு விஷயமே இல்லாத புத்தகமா தான் தோணும்.

முக்கியமான பிரச்னை என்னென்னா, இவர் எல்லா இடத்துலயும் ஆன்மீகத்தை நுழைச்சது தான். அது இந்த ஒட்டுமொத்த புத்தகத்தையும் சாப்டீருச்சு.

எல்லாமே எம்பெருமான்னு இருக்குறவங்களுக்கு அது அமிர்தமா இருக்கும். ஆனா அறிவியலையும் ஆன்மீகத்தையும் கலந்தது எல்லோராலையும் ஏற்றுக்கொள்ளப் படாது. ரெண்டுமே எதிரேதிர் துருவம். இவர் இதுல இணைக்க முயற்சி பண்ணிட்டார். சொல்லப்போனா குழந்தைங்களுக்கு பாடத்துல விளக்கம் சொல்ல, நடைமுறை வாழ்க்கைல இருந்து சில உதாரணங்களை தேர்ந்தெடுக்குற மாதிரி  கடவுளை content ஆக்கிட்டார்.

இதுல இன்னொன்னு என்னெனா, அந்த முரண்ல்ல இருந்து தப்பிடணும்னு சில வரிகளை சேத்தி இருக்காரு. ஆனாலும் அது அவர காப்பாத்தல. முக்கியமா, ஒரு புது விஷயம் பத்தின அறிமுகம் கொடுக்கும்போது சின்னதா எழுதம்ன்னு கட்டுப்பாடு இருக்க கூடாது.  சொல்லவந்த செய்தி சரியா கடத்தபடாம போறது கூட குற்றம் தான். ஏனா அது தப்பா பிரதிபலிக்கக் கூடிய சாத்தியம் இருக்கு. இங்க அதான் நடந்திருக்கு.

அறிவியல் சம்பந்தமான அறிமுககட்டுரைகள் தான். அன்னைக்கு நிச்சயமா பலராலும் வரவேற்றக்க பட்டிருக்கும் அதுல சந்தேகம் இல்லை. முக்கியமா வார வாரம் பத்திரிகைல வந்திருக்கு. இதுல அந்த content நமக்கு நல்லாவே தெரியும் அதை கழிச்சிட்டு பாக்கும்போது இந்த புத்தகம் சிலருக்கு பிழையாக தெரியும். ஆனா விஷம்ன்னு சொல்ற மாதிரி ஒன்னும் இல்லை. சாதாரண வாக்கியத்துல கூட அரசியல் பண்ணாதீங்க. நீங்க கண்டுக்கலைனாலே அது ஒன்னும் இல்லாம போய்டும்.

ஆசிரியரை பிடிச்சவங்க கண்டிப்பா வாசிக்கலாம். மத்தபடி இதுல அறிவியல், அதும் இப்ப நாம தெரிஞ்சிக்க எதும் இல்லை. அதெல்லாம் எப்பவோ பயன்பாட்டுக்கு வந்தாச்சு.

நன்றி :

வாசிப்பை நேசிப்போம்
முகநூல்

கருத்துகள் இல்லை: