நான் ரசித்தகவிஞர்கள் (ஷெல்லி1792-1822
ஆங்கிலக் கவிஞர் )
ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பெயர் புரட்சிக்கவிஞன் ஷெல்லியினுடையது.முப்பது ஆண்டுகளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின்
படைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வளரக்கூடியது .
ஏனெனில் அவன் குரல் கலகக்காரனின் குரலாயிருந்து.எந்து துன்பத்திலும்
எத்துனைபேரிடர்களிலும் மானிடத்தின் மீது நம்பிக்கையிழக்காத குரல் அது.நம்பிக்கையை மட்டுமே சிறகுகளாகக் கொண்டு ஒரு புதிய வானத்தை
மீட்டெடுக்க புறப்பட்ட குரல் அது.
சுதந்திரத்தின் மீது தீராவேட்கை கொண்டகுரல் அது.
எந்த நாட்டிலும் எந்தவிதஒடுக்குமுறைக்கும் எதிராகக்கிளர்ந்தெளுந்த ஒரு கலகக்காரனின் குரல்அது
மானிடத்திற்கே எதிர்காலம் என்று கனவுகண்டகுரல்அது.
இந்த சுதந்திரக்குரலின் மகத்துவம் கண்டே நம்மகாகவி பாரதி தன்னை ஷெல்லி தாஷன் என்று கம்பீரமாகக்கூவினார்.
ஐந்து மிகப்பெரிய ஆங்கில ரொமான்டிக் கவிஞர்களில்ஷெல்லி பைரனுக்கு அடுத்ததாகவும் ஜான்கீட்ஸிற்குமுந்தையதாகவும் வருகிறார்.
ஆனால்ரொமான்டிக் கவிஞர்களிலேயே மிகப்பெரிய வசீகரமும்
என்றென்றும் மரிக்காத மகா கவிதைகளையும் விட்டுச்சென்ற மகா கவிஞர்அவர்.
எந்தக்கவிதை வடிவத்திற்கும்தன் கவிதைகளை மாற்றிக்கொள்ளாமல்தன்கவிதையின் ஆளுமைக்கு தகுந்தாற் போல்கவிதையின் வடிவத்தை மாற்றிக்கொண்டமகாகலைஞன்அவன் (ஓட்ஸ் ,லிரிக்ஸ் மரபுக்கவிதை ரொமான்டிக்கவிதைஇரங்கற்பா) எதுவாயினும் சரி
அதில் ஷெல்லியின் ஆளுமையே நிறைந்திருக்கிறது
ஷெல்லியைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுவது என்பது கடலையும் காற்றையும் கைகளில் அள்ளி முடித்துவிட்டேன் என்றுபாவனை செய்வதாகும்...
இப்படிப்பட்டமகா கவிஞர்களுக்கு வாழ்க்கை ஏன் கசப்பில்எழுதப்படுகிறது என்பது என்றும் புரியாதபுதிர்தான்....
ஷெல்லி இளம் வயதிலிருந்தே கலகக்காரனாக புயல்வீசும் மனம் கொண்டவராகஇருந்தார்.
எதில்ஒன்றிலும் கட்டுப்படாதபுயலைப்போலஅவர்மனம் எப்பொழுதும்கொந்தளிக்கும் புயல் சூழ்ந்த கடலாயிலிருந்தது
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே
**நாத்திகத்தின்அவசியம்** என்ற புத்தகம் வெளியிட்டு அதனால் பல்கலைக்கழகத்திலிருந்து விரட்டப்பட்டார் பிறகுசெல்லும் இடங்களிலெல்லாம் விரட்டபட்டார்.
முதல்காதலிலும் துரதிர்ஷ்டம்.முழுமைபெறாத காதல் அது. திருமணத்தில் முடிந்து பின்புஅவர்காதலியின்
(ஹெரியட்வெஸ்ட்ப்ரூக்) மரணத்தில் முடிந்தது
இரண்டாவது திருமணம்
மேரியோடு இலக்கியத்திலும் அறிவுத்துறையிலும்சரிசமமாகப்பங்குஎடுக்கக்கூடியபெண்மேரி
ஆனாலும்அதுவும்கூட நீட்டிக்கவில்லை...
இம்முறைமரணம்வந்துதழுவிக்கொண்டது
ஷெல்லியை....இங்கிலாந்திலிருந்துஇத்தாலிக்குசென்றஇடத்தில்ஒருபடகுவிபத்தில்அதுநடந்துமுடிந்தது
நான்ரசித்தவரிகள் (ஓட்டூவெஸ்ட்விண்ட்)
(காற்றைப்புகழ்ந்து எழுதப்பட்டகவிதையில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சில வரிகள் இவை )
ஓகட்டுக்கடங்காத காற்றே!
இலையுதிர்காலத்தின் மூச்சே!
உன் உருவமற்ற இருப்பினை
நான்இவ்வெளியெங்கும் உணர்கிறேன்
ஒருமந்திரவாதியின் கைகளுக்குகட்டுப்பட்டு ஓடும்
பேயுருவங்கள் என
இந்தஉதிர்ந்த இலைகள்
உன்மூச்சொன்றினாலேயே மாயமாகின்றன,,,,,
நிலங்களில் புதைக்கப்பட்ட
சிறகு முளைக்கப்பட்ட விதைகளோ
பிணமென மூச்சுப்பேச்சின்றி கிடக்கின்றன
வெப்பத்தை கொண்டு வரும் உன் சகோதரியாம்
வசந்தத்தின் வருகையை எதிர்பார்த்து....
ஓ கட்டுக்கடங்காதகாற்றே!
வாழ்க்கையென்னும்முள்ளில்விழுந்து
இரத்தம்சொட்டிக்கொண்டிருக்கிறேன்நான்....
நான் ஒருஇறந்த இலையாய் இருந்தால்
நானொரு நகரும் மேகமாய் இருந்தால்
உன்னோடு விண்வீதியெங்கும் வலம் வருவேன்
எந்தகட்டுப்பாடும்அற்று
காலத்தைகடந்தும் அதன் முடிவிலும்
என்னை ஒருஅலையாய்
ஒருஇலையாய்
ஒருமேகமாய்மாற்றி
உன்னோடுஅழைத்துச்செல்லாயோ?
அல்லதுஉன்பாடலைப் பாடும்
ஓர் சிறிய இசைக்கருவியாய் என்னைமாற்றி
உன்னைப்பற்றியேஇசைக்கச்செய்
இந்தவனமெங்கும்.....
ஓ! என்ரணத்தின்வசந்தமே
உன்னை நான் கேட்கிறேன்
இது இலையுதிர்காலம் என்றால் தான் என்ன
நாளை வசந்தம் வராமலா போகும்?
தங்கேஸ்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக