திருமந்திரம் - பாடல் #990: நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.
விளக்கம்:
'சிவாய' என்ற மூன்று எழுத்தோடு 'நம' என்ற இரண்டு எழுத்து சேர்ந்து 'சிவாயநம' எனும் சிறந்த ஐந்தெழுத்து மந்திரத்தோடு ஆதார 12 எழுத்துக்களும் சேர்ந்து ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இருக்கும் திருவம்பலச் சக்கரத்தில் ஒளி ஒலியாக சிவசக்தி சிறந்து விளங்கும் நிலையில் அது சங்கரன் சக்கரம் ஆகும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக