9 மார்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1052: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

சுத்தவம் பாரத் தளித்த சுகோதயள்
வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை
அத்தகை யான மனோரணி தானுமாய்
வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

விளக்கம்:

பாடல் #1051 இல் உள்ளபடி தூய்மையும் அனைத்து ஞானத்தின் மொத்த உருவமாகவும் இருக்கும் திரிபுரை சக்தி கருணையோடு பேரின்பத்தை அளிப்பவள். அவள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் மெய்ப்பொருளான உமா சக்தி எனும் பெயருடைய மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். அத்தகைய மாபெரும் சக்தி அணுவுக்குள் அணுவைப் போல நுண்ணியமாகவும் இருக்கின்றாள். இப்படி இருக்கும் இவளது திருக்கோலமே மொத்த ஞானத்தின் உருவமாகும்.

கருத்து: திரிபுரை சக்தி உமா சக்தி என்ற பெயரில் ஞானத்தின் முழு உருவமாக இருந்து அதைத் தேடுபவர்களுக்கு கருணையோடு அருளுபவளாக இருக்கின்றாள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: