13 ஏப்., 2010

யோக சித்தி-21: கடவுள் தன்மை-2

வாய்மைநலன் நோன்பு வன்றொன்றடக்கம் இவை
தூயோனைச் சேரும் துணை.

பொய்யாவொழுக்கம், புண்ணிய நல்வினை, மனம், மொழி, மெய்த் தூய்மைக்கேற்ற தவ விரதங்கள், ஆற்றலுள்ள அருட்பணிகள், நான் என்னும் முனைப்பு அற்று எல்லாம் திருவருள் என்று அடங்கி நடத்தல் ஆகிய இச்சாதனங்கள் சுத்தனாகிய இறைவனைக் கூடும் துணையாகும்.

கருத்துகள் இல்லை: