23 ஜூலை, 2026

இன்றைய புத்தகங்கள்

வாசகர் பரிந்துரை

காலச்சுவடு பதிப்பகத்தின் காலத்தால் அழியாத ‘6’  நாவல்கள்! 

”வாசித்து முடித்த பிறகும் நீண்ட காலம் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்ட நூல்கள் இவை.”

பட்டியலில் இடம்பிடித்துள்ள காலச்சுவடு வெளியீடான 6 முக்கிய நாவல்கள்:

  சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/sila-nerankalil-sila-manitharkal_113/ 

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/SilaNerankalilSilaManitharkal_1650/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B0H2VNCPZ4 

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B08RW8WXCK/ 

 மோக முள் - தி. ஜானகிராமன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/mohamul_29/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NL7YRQY

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Z4Z5HC7/ 

 மாதொருபாகன் - பெருமாள் முருகன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/maathorubagan_54/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07PGPT1P3

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y661Q3Z

 கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/gopalla-gramam_61/

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/gopalla-gramam_1364/

அமேசானில் வாங்க:
 
https://www.amazon.in/dp/B0BSBX7J4T

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y64WLWH/ 

 மரப்பசு - தி. ஜானகிராமன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/marappasu_159/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07PY7P5Y1

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y66MGV8/ 

 18-வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/18vathu-atchakkodu_115/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NL7XKZX  

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y65RBCR 

நன்றி: பாரதி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.instagram.com/reels/Daaiwddhsqa/

ஆன்மீக மஞ்சரி

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

20 ஜூலை, 2026

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

மேன்மக்கள்

*சுவாமி விபுலானந்தர்*
(நினைவு தினம் ஜூலை 19, காலமான ஆண்டு 1947.)
.....................................................
  1892 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழறிஞர் விபுலானந்தர். இயற்பெயர் மயில்வாகனம், பல்துறை சார்ந்த பேரறிஞர். கவிஞர். விஞ்ஞானப் பட்டதாரி. 

   பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியர். ஆராய்ச்சியாளர். மொழிபெயர்ப்பாளர். துறவி.
  
   அடிகளார் 1931இல் தமிழ் நாடு வந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். 

  பின் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரானார். 
  
  1922 இல் சென்னை ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு ராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமம் பெற்றார். 

   அங்கு "ராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ் இதழுக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். "செந்தமிழ்" என்னும் பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதினார். 

    ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலானந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தர். 
  
   அதன் பின் இலங்கை திரும்பினார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். 

   மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்யாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்யாலயம் என்பன அவர் நிறுவியவையே. 
  
   தலைநகர் கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்யாலயத்தைத் தொடங்கினார். 

  அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் ராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.
  
   சாதி, மத, மொழி, இன ஏற்றத் தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். 
   
   1924இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி. சீனிவாஸ ஐயங்க¡ரின் வேண்டுகோளுக்கிணங்க "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார்.

     இவர் எழுதிய நூல்களில் யாழ் நூல் மிகவும் புகழ்பெற்றது. 1937இல் இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். 

   அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கில இதழுக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

  கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983இல் விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "விபுலானந்தர் பிள்ளைத் தமிழ்" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 
 
   சிவானந்த வித்யாலய முகப்பில் உள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட பின்வரும் கவிதை வரிகள் பொறிக்கப் பட்டுள்ளன:

  "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
   வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
   வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
   உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

.....................................................
திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

15 ஜூலை, 2026

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

பெருந்தலைவர் நினைவஞ்சலி 🙏🙏🙏

ஜூலை 15: காமராஜ் பிறந்த தினம்.
.............................................
*பெருந்தலைவரும் நானும்....*
*திருப்பூர் கிருஷ்ணன்.*
..............................................
 *பெருந்தலைவர் காமராஜரை நான் முதன்முதலில் பார்த்தது, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்.... 

  தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த மைதானத்தில் பொதுக்கூட்டம். 

  கூட்டம் தொடங்கிவிட்டது. `பெருந்தலைவர் வந்துகொண்டிருக்கிறார்!` என்ற அறிவிப்பு மட்டும் அடிக்கடி ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. 

  அப்போது காமராஜ் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தவர் மிகச் சிறந்த பேச்சாளரான குமரி அனந்தன். 

   (ஏற்கெனவே முன்னொரு முறை கல்லூரி முத்தமிழ் மன்றத்திற்காக குமரி அனந்தனைப் பேசக் கூப்பிட்டிருந்தோம்.  திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அரங்கிற்குக் `குமரன் கூடம்` என்று பெயர். `குமரன் கூடத்தில் இந்தக் குமரி பேசுவது பொருத்தம்தானே?` என்று பேச ஆரம்பித்து மாணவர்களைக் கவர்ந்தவர் அவர்.) 

  அவர் பேசப் பேச காமராஜ் மேடைக்கு வந்துசேர்ந்தார்.  

  `ஏழைகளின் இல்லம் நோக்கி நடக்கும் கால்கள் எவருடைய கால்கள்? அவை பெருந்தலைவரின் கால்கள். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் கைகள் எவருடைய கைகள்? அவை பெருந்தலைவரின் கைகள்!` என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்தார். 

  அப்போது, அந்தப் புகழ்ச்சியை விரும்பாத பெருந்தலைவரிடமிருந்து `போதும்ணேன்!` என்று ஒரு குரல் வந்தது. அடுத்த கணம் சடக்கென்று தன் பேச்சை முடித்துக் கொண்டு குமரி அனந்தன் உட்கார்ந்துவிட்டார். 

  தன் புகழ்ச்சியை விரும்பாத காமராஜையும் இன்றைக்கு ஆள்வைத்துத் தங்களைப் புகழ்ந்துகொள்ளும் சில தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், மனத்தில் கடந்த பொற்காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு எழுகிறது. 

   காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். விழிகளில் ஓர் இனந்தெரியாத ஒளி. முழங்கால் வரை நீண்ட கரங்கள். கிராமியப் பேச்சு. 

  `ஸ்தாபன காங்கிரசுக்கு வாக்களியுங்கள்!` என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை. 

   `இந்தக் கட்சியின் அறிக்கை இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு அவரவர் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்!` இப்படித்தான் அவர் பேசினார். 

  அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக் கூடப் பயன்படுத்தவில்லை. ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்களின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது. 

   காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. `நான் உங்களில் ஒருவன்` என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் உள்ளத்திலிருந்து பேசினார் அவர். அன்றுமுதல் நான் காமராஜின் தீவிர ரசிகனானேன். 

   (சிறிதுகாலம் முன்னர் சென்னையில் என் இல்லத்திற்குக் குமரி அனந்தன் வருகை தந்தபோது அவரிடம் இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினேன். காமராஜ் பற்றிய தூய நினைவுகளில் தோய்ந்த குமரி அனந்தன் உண்மையிலேயே விம்மி விம்மி அழலானார். 

   என் மனைவி தானும் கலங்கியவாறே அவரை மோர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறியது அண்மைக்காலச் சம்பவம்.).....
  
  *திருப்பூரில் தாயம்மாள் என்ற சகோதரி, ஸ்தாபன காங்கிரஸ் தலைவியாக இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்காக காமராஜ் பிறந்த தினத்தை ஒட்டி `தேச பக்தி` என்ற தலைப்பில் ஒரு கவிதைப் போட்டி நடத்தினார்.   

  நான் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு என் கவிதைக்காக முதல் பரிசு பெற்றேன். வாணிஜெயராம் பாடிய காமராஜ் குறித்த பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுத் தான் பரிசு. 

  (அந்த இசைத்தட்டில் ஒலித்த `இருக்க இடமும் வரும் எல்லோருக்கும் வாழ்வு வரும்! காமராஜ் ஆளவந்தால் கட்டாயம் வாழ்வு வரும்! காலம் வரும் கண்ணே! நீ கண்துயில்வாய் முன்னே!` என்ற தாலாட்டுப் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தது.) 

  அப்படி நான் பரிசுபெற்றதில் என் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம் காமராஜ் என் குடும்பத்தினர் அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தார். சுதந்திரப் போராட்டச் சிந்தனைகளைத் தாங்கிய குடும்பம் என் குடும்பம். 

  கதர் மட்டுமே கட்டியவர்களும் கட்டுபவர்களும் என் குடும்பத்தில் பலர் உண்டு. என் தந்தை பி.எஸ். சுப்பிரமணியம், கோழிக்கோட்டில் இருந்தபோது, காந்தி அங்கு வருகை தந்து வழங்கிய ஆங்கில உரையை காந்தி பேசப் பேச மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்....

  *நான் சென்னை வந்ததும், பெருந்தலைவரின் அணியில் பேச்சாளராக இயங்கிக் கொண்டிருந்த தீபம் நா. பார்த்தசாரதியின் சீடனாக தீபத்திலேயே பணிக்குச் சேர்ந்ததும் என் வாழ்வில் பின்னர் நடந்தவை.  

  நா.பா. அந்தக் காலகட்டத்தில் கல்கியில் `சத்திய வெள்ளம்` என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். அதில் பெருந்தலைவர் காமராஜே `ராமராஜ்` என்ற தலைப்பில் ஒரு பாத்திரமாக வருவார். 

   கல்லூரிப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட முற்றிலும் அரசியல் சார்ந்த ஒரு துணிச்சலான நாவல் அது. காமராஜின் பெருமையைப் பேசும் நாவல். 

  காமராஜ் அணியில் இணைந்து ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்களாக நா.பா., ஜெயகாந்தன், சோ, கண்ணதாசன் போன்றோரெல்லாம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. 

 ஒருமுறை காமராஜைப் பார்க்க நா.பா. சென்றபோது நானும் உடன்சென்றேன். `தம்பியும் எழுத்தாளரா?` என்று நா.பா.விடம் கேட்டார் காமராஜ். `ஆமாம், தீபத்தில்தான் பணிபுரிகிறார்` என்றார் நா.பா.  

  `தம்பீ. இவரு மாதிரி நாட்டுக்கு நல்லது செய்யற சங்கதிகளைத்தான் எழுதணும். தெரியுதா?` 

  காமராஜுக்கு மிக அருகில் நான் அமர்ந்திருந்தேன். அன்பு மயமாக என் கரங்களைப் பற்றிக் கொண்டு ஒளிவீசும் விழிகளால் கூர்மையாக என்னைப் பார்த்தவாறு இதைச் சொன்னார் அவர். 

   நயன தீட்சையும் ஸ்பரிச தீட்சையும் ஒருங்கே நடந்த மாதிரி எனக்கு இனந்தெரியாத பரவசம். 

  ஆன்மீகத் துறவிகள்தான் துறவிகளா! தேசத்திற்காக சகலத்தையும் துறந்த இவர் தேசத் துறவி அல்லவோ! சொந்தத் தாய்க்குக் கூடத் தன் அரசியல் அந்தஸ்து காரணமாக ஒரு சலுகையும் காட்டாத மாமனிதர். சொத்தே சேர்க்காத அரசியல்வாதி.... 

  *நா.பா. விறுவிறுவென்று அரசியல் பேச்சுத் துறையில் பெரும்புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். ஸ்தாபன காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளராக மாறினார். தொடர்ந்து வெளியூர்க் கூட்டங்கள். ஒருமுறை என்னிடம் அந்தரங்கமாகப் பேசும்போது நா.பா. சொன்னார்:

  `என்னுடைய பொருளாதாரப் பிரச்னைகள் பிறர் அதிகம் அறியாதவை. ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பம். நான் ஒருவன்தான் சம்பாதிக்கும் நபர். அரசியல் மேடைகளில் பேசுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஓரளவு பிரச்னையை சமாளிக்க உதவுகிறது. 

  என்றாலும் தீபம் இதழுக்கும் அளவு கடந்து செலவாகிறது. என்ன செய்வது! அரசியல் பேச்சுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக சன்மானம் கிடைத்தால் நன்றாயிருக்கும். ஆனால் பெருந்தலைவரிடம் இதை நேரில் எப்படிச் சொல்வது?`

 நான் தயக்கத்தோடு என் ஆலோசனையைச் சொன்னேன்:

 `பெருந்தலைவருக்கும் உங்களுக்கும் ஒருசேர நெருக்கமான ஒரு நண்பர் மூலமாக இந்த விஷயத்தை அவர் காதுக்கு எட்டச் செய்யலாமே?`

  அதுவும் சரிதான் என்ற நா.பா., `காதல் தூங்குகிறது` நாவலை எழுதிய எழுத்தாளரும் காமராஜுக்கு நெருக்கமானவருமான கு. ராஜவேலுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொன்னார். 

  சில நாட்களில் நா.பா.வின் பேச்சுக்கான தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்ட நா.பா. மகிழ்ச்சியிலும் மனநிறைவிலும் ஆழ்ந்தார். 

  பின்னொரு சந்தர்ப்பத்தில் எனக்கும் நன்கு அறிமுகமான கு. ராஜவேலுவை நான் தனியே சந்தித்தபோது ராஜவேலு என்னிடம் சொன்னார்:

  ``நா.பா.வின் பொருளாதாரப் பிரச்னையையும் தீபம் இதழின் சிரமங்களையும் பெருந்தலைவரிடம் சொன்னேன். உடனே நா.பா.வின் மேடைப் பேச்சுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறார்கள் என்று உதவியாளரை அழைத்து விசாரித்தார். 

 `என்னய்யா, இவ்வளவு குறைவான தொகையா? நமக்காக மேடைல பேசறவங்களுக்குக் குழந்தை குட்டி எல்லாம் இல்லையா? அந்தக் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவு இல்லையா? உடனே அந்தத் தொகையை இரண்டு மடங்கு ஆக்குங்கள்!` என்று உத்தரவு போட்டார். 

  உதவியாளர் `அப்படியானால் அவருக்கு இணையான மற்ற பேச்சாளர்களுக்கும் உயர்த்த வேண்டியிருக்கும்` என்று சொல்லித் தயங்கினார். 

  `எல்லோருக்குமே உயர்த்துங்கள். எல்லோரும் குடும்பம் உடையவர்கள் இல்லையா? என்னை மாதிரித் தனிக்கட்டையா என்ன? அப்படி நமக்காக உழைப்பவர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் கட்சி எதற்கு?` என்று சத்தம் போட்டார் காமராஜ்!`

  இதைச் சொல்லிவிட்டு ராஜவேலு நெகிழ்ந்தபோது என் கண்களும் பனித்தன. திருமணமே செய்துகொள்ளாத ஒருவர், குடும்பஸ்தர்களின் சிரமங்களை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என எண்ணி நான் வியந்தேன்...... 

   *மறக்க முடியாத அந்த அக்டோபர் இரண்டாம் தேதிக்குச் சில நாட்கள் முன்பு என் தாயாரைக் காணச் சென்னையிலிருந்து திருப்பூர் சென்றேன். 

  ஏதோ ஒரு பொருளை அலமாரியிலிருந்து எடுத்தேன். அப்போது, என் அம்மா பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்ததும் காமராஜ் பிறந்த நாள் கவிதைப் போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்ததுமான அந்த வாணிஜெயராம் பாடிய இசைத்தட்டு தற்செயலாகக் கீழே விழுந்து இரண்டாக உடைந்துவிட்டது. 

  ஓடி வந்த என் தாயார் திடீரென அளவற்ற சோகத்தில் ஆழ்ந்தார். `அதே இசைத்தட்டு வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம்! இது உடைந்ததைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்!` என்று என் அம்மாவிடம் ஆறுதல் சொன்னேன். 

  ஆனால் சகுனங்களில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த என் அம்மாவை என்னால் சரிவர ஆறுதல் படுத்த இயலவில்லை. உடைந்தது இசைத்தட்டு மட்டுமல்ல, என் அம்மாவின் மனமும்தான்.

  `இது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் முன்கூட்டிய சூசகம்` என்று சொல்லிக் கவலையில் ஆழ்ந்தார் அவர். 

  அந்தக் கெட்டது நடந்தே விட்டது. பெருந்தலைவர் காலமான விவரமும் `விளக்கை அணைத்துவிடு!` என்று அவர் இறுதியாகப் பேசிய வாசகங்களும் நாளிதழ்களில் மிகச் சில நாட்களில் செய்தியாக வந்தன. 

  தன்னலம் கருதாத அந்தக் காந்தியவாதி, காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் காற்றில் கலந்துவிட்டார்.... 

  *காமராஜ் என்ற அந்தத் தியாக தீபத்தின் மறைவு குறித்து மீளாத் துயரில் ஆழ்ந்த நா.பா., தீபம் இதழில் அட்டைப்படத்தில் காமராஜ் திருவுருவை வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார். காமராஜ் குறித்த அட்டைப்படக் கவிதை ஒன்றை நான் அதே தீபத்தில் எழுதினேன். 

  அப்போது நா.பா.விடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டார், `இலக்கியப் பத்திரிகையான தீபத்தில் காமராஜ் படத்தை எப்படி அட்டையில் வெளியிடலாம்?` என்று. அதற்கு நா.பா. சொன்ன பதில்: 

  `ஏனென்றால் காமராஜே ஓர் இலக்கியம்தான்!`  

(மீள்பதிவு.) 
..............................................

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

14 ஜூலை, 2026

இன்று ஒரு தகவல்

கரிச்சான்குஞ்சு நினைவுகள்

அஞ்சலி 🙏🙏🙏

🕯️ கண்ணீர் அஞ்சலி 🕯️

இசையரசி எஸ். ஜானகி
(1938 – 2026)

தென்னிந்திய இசை உலகின் ஒப்பற்ற குரலாக விளங்கிய இசையரசி எஸ். ஜானகி அவர்களின் மறைவு இசை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில், 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தலைமுறைகள் பலரின் இதயங்களில் அழியாத இடத்தைப் பெற்றவர்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கும் GTR – ஜெர்மன் தமிழ் வானொலியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🕊️ "உங்கள் குரல் என்றும் எங்கள் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்."

GTR – ஜெர்மன் தமிழ் வானொலி
🌐 www.gtamilradio.com
📱 German Tamil Radio | Facebook: GTamilRadio

அஞ்சலி 🙏🙏🙏

நவீனத் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும் சாகித்திய அகாதெமி விருதாளருமான பூமணி மறைந்தார்.

கி. ராஜநாராயணன் அறிமுகப்படுத்திய கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சியாக எழுத்துலகில் புகுந்தவர் பூமணி. எனினும் அந்தக் களத்தில் முன்னத்தி ஏர் என்று அவரே குறிப்பிட்ட கி.ரா.வைக் கடந்து கரிசல் மண்ணின் அறியப்படாத மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகவும் உயிர்ப்போடும் சித்தரித்தார். அவரது சிறுகதைகளும் நாவல்களும் அந்தக் கருமண் நிலத்தின் ஆன்மாவை நவீனத் தமிழுக்குக் கொடையாக அளித்தன. தமிழில் தலித் இலக்கியத்தின் ஆரம்பப் படைப்புகள் பூமணியுடையவை. அவற்றைத் தலித் எழுத்து என்று வகைப்படுத்த முடியாத விதத்தில் மானுடச் சிக்கல்களைப் பேசும்  இலக்கிய ஆவணமாக மாற்றியவர் அவர். 'பிறகு' நாவலின் அழகிரிப் பகடையும் 'வெக்கை' நாவலின் செலம்பரமும் அவர் தமிழ்ப் புனைவிலக்கியத்துக்கு வழங்கிய ஜீவனுள்ள கதைமாந்தர்கள். அந்தப் பாத்திரங்கள் அழியாதவை. அவர்களை உருவாக்கிய பூமணியும் அழிவற்ற கலைஞர்.

பூமணிக்குக் காலச்சுவடின் புகழ் அஞ்சலி.

#பூமணி #Poomani #பூமணிமறைவு #எழுத்தாளர்பூமணி #PoomaniWriter #கரிசல்இலக்கியம் #வெக்கை #பிறகு #Asuran #தமிழ்இலக்கியம் #தமிழ்ப்புனைவிலக்கியம் #தலித்இலக்கியம் #கரிசல்மண் #தமிழ்எழுத்தாளர் #சாகித்தியஅகாதெமி #காலச்சுவடு #கண்ணீர்அஞ்சலி #rippoomani 

@followers @highlight Kannan Sundaram TopFans

ஆன்மீக மஞ்சரி

அருள்வாக்கு

13 ஜூலை, 2026

​பயணங்கள் முடிவதில்லை: இப்னு பதூதாவின் நெடிய முப்பதாண்டுப் பயணம்!


​பயணங்கள் முடிவதில்லை: இப்னு பதூதாவின் நெடிய முப்பதாண்டுப் பயணம்!

​ஒரு சிறிய பயணப் பையை மட்டும் எடுத்துக்கொண்டு, பெற்றோரிடம் விடைபெற்று, ஒரு சாதாரண விடுமுறைப் பயணமாக உங்களது 21-ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறுவதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களோ? இப்போது, முப்பது ஆண்டுகள் வரை நீங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை என்றும், அதற்குள் சுமார் 73,000 மைல்கள் தூரத்தைக் கடந்து, நாற்பதுக்கும் மேற்பட்ட நவீன நாடுகளுக்குச் சென்று, கடல் கொள்ளையர்களின் தாக்குதல்கள் முதல் கடுமையான வெப்பமண்டல புயல்கள் வரை அனைத்தையும் கடந்து உயிர் பிழைத்திருக்கிறீர்கள் என்றும் கற்பனை செய்து பாருங்கள்.

​இது ஏதோ ஒரு சாகசத் திரைப்படத்தின் கற்பனைக் கதை அல்ல. இது இடைக்கால உலகின் மிகச்சிறந்த பயணியான அபு அப்துல்லா முகமது இப்னு பதூதாவின் உண்மையான வாழ்க்கை வரலாறு!

​உலகப் பயணங்கள் என்று கூறினாலே நம் நினைவுக்கு வரும் மார்கோ போலோவை விட, வரலாற்றில் மிக நீண்ட தூரம் பயணித்த பெருமை இப்னு பதூதாவையே சாரும். நவீன விமானங்கள், ஜிபிஎஸ் (GPS) வரைபடங்கள் அல்லது ஹோட்டல் முன்பதிவு வசதிகள் எதுவும் இல்லாத அந்தத் தூரத்துக் காலத்தில், மனிதனின் தேடல் உணர்வே அவனுக்கான சிறந்த வழிகாட்டி என்பதை அவர் நிரூபித்தார்.

​முற்றுப்பெறாத ஒரு புனிதப் பயணம்

​கி.பி. 1325-ஆம் ஆண்டில், மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்த தனது வீட்டிலிருந்து ஒரு இளம் சட்ட மாணவர் வெளியேறினார். அவரது ஆரம்பக்கால இலக்கு மிகவும் எளிமையானது மற்றும் ஆன்மீகம் சார்ந்தது: மெக்காவிற்குச் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது மட்டுமே.

​அந்தப் பயணம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவரது கால்கள் அந்த திறந்தவெளிச் சாலையில் நடக்கத் தொடங்கியதும், ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது. பயணத்தின் மீதான ஆர்வம் அவரை முழுமையாக ஆட்கொண்டது.

​தனது புனிதப் பயணத்தை முடித்த பிறகும் அவர் மொராக்கோவிற்கு நேரே திரும்பிச் செல்லவில்லை. மாறாக, பரந்து விரிந்திருந்த அந்தத் தொடுவானத்தைப் பார்த்து, "இந்த எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது?" என்ற எளிமையான கேள்வியைக் கேட்டார். அந்த ஒற்றைக் கேள்விதான் அடுத்த முப்பது ஆண்டுகள் அவரை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி ஓட வைத்தது.

​அசாத்திய துணிச்சலுக்கு ஒரு சோதனை

​14-ஆம் நூற்றாண்டில் பயணம் செய்வது என்பது அசாத்திய துணிச்சல் இல்லாதவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இன்றைய நவீன நெடுஞ்சாலைகளோ அல்லது தங்குமிட வசதிகளோ இல்லாத அக்காலத்தில், ஒவ்வொரு மைலையும் அவர் தனது அசாத்திய சகிப்புத்தன்மையால் மட்டுமே கடந்தார்.

​திறந்தவெளிப் பயணம்: இப்னு பதூதா கடுமையான பாலைவனங்களைக் கடந்தார், அங்கு பகல் நேரத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்ததால், பயணிகள் இரவில் மட்டுமே விண்மீன்களின் நிலையை வைத்து திசையறிந்து பயணிக்க முடிந்தது.

​கடல் கொள்ளையர்கள்: இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்யும்போது, அவரது கப்பல் கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. அவர் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்த போதிலும், அவரது புத்திசாலித்தனமும் விடாமுயற்சியும் அவரை உயிர் பிழைக்க வைத்து பயணத்தைத் தொடரச் செய்தது.

​அரசவைப்பணி: ஒரு சிறந்த அறிஞராக அவருக்கு இருந்த நற்பெயர் அவர் பயணிக்கும் வேகத்தை விட வேகமாகப் பரவியது. அவர் இந்தியாவை அடைந்தபோது, டெல்லி சுல்தான் அவரது திறமையைக் கண்டு வியந்து, அவரை ஒரு நீதிபதியாக நியமித்தார். பின்னர் அவரைத் தனது அதிகாரப்பூர்வ தூதராக சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.

​மனித நேயத்தைக் கண்டறிதல்

​இப்னு பதூதாவின் பயணக் குறிப்பேடான 'ரிஹ்லா' (Rihla - அதாவது "தி ஜர்னி") என்பதை இவ்வளவு அழகானதாக மாற்றுவது எதுவென்றால், மனிதர்களுடனான அவரது ஆழமான பிணைப்புதான்.

​அவர் சென்ற இடங்களிலெல்லாம் மனித நேயத்தையும், கலாச்சாரப் பகிர்வையும் தேடினார். சட்டம் மற்றும் கலாச்சாரத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாக, அவர் அரச அரண்மனைகள், எளிய பாலைவனக் கூடாரங்கள் மற்றும் பரபரப்பான சந்தைகள் என அனைத்து இடங்களிலும் அன்போடு வரவேற்கப்பட்டார். இந்தியாவின் நறுமணப் பொருட்கள், சீனாவின் மாபெரும் துறைமுகங்கள் மற்றும் தன்னிடம் எதுவும் இல்லாதபோதும் தனக்கு உணவும் தங்குமிடமும் தந்து உதவிய அந்நிய மனிதர்களின் எல்லையற்ற தாராள மனப்பான்மை ஆகியவற்றை அவர் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

​உலகப் பயணிகள் அனைவரும் ஒரு நாள் கண்டறியும் ஒரு உன்னத உண்மையை அவரும் நிரூபித்தார்: நாம் எவ்வளவு தூரம் சென்றாலும், உள்ளூர் பழக்கவழக்கங்கள் எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றினாலும், மனித அன்பு என்பது உலகளாவிய ஒரு பொதுவான மொழி மட்டுமே.

​முப்பது ஆண்டுகால பயணத்தின் முடிவு

​இப்னு பதூதா இறுதியாக 1354-இல் மொராக்கோவிற்குத் திரும்பியபோது, அவர் முற்றிலும் ஒரு புதிய மனிதராக மாறியிருந்தார். ஒரு சிறிய பையுடன் கிளம்பிய அந்த 21 வயது இளைஞன், முப்பது ஆண்டுகால உலக வரலாற்றைத் தனது மனதில் சுமந்து வந்த ஒரு ஞானமிக்க முதியவராகத் திரும்பினார்.

​"பயணங்கள் முதலில் உங்களை வார்த்தைகளின்றி மௌனமாக்கும், பின்னர் உங்களை ஒரு சிறந்த கதையாசிரியராக மாற்றும்" என்று அவர் தனது குறிப்பில் எழுதியுள்ளார்.
​உலகம் என்பது பயந்து நடுங்குவதற்கான இடமல்ல, அது அனுபவிப்பதற்கான ஒரு களம் என்பதை அவரது காலடிச் சுவடுகள் நமக்கு நினைவூட்டுகின்றன. பயணத்தில் ஏற்படும் ஒவ்வொரு தடங்கலும் ஒரு சிறந்த கதைக்கான தொடக்கமே, மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு புதிய மனிதரும் நம்முடன் அன்பைப் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கும் ஒரு நண்பரே!

​நீங்கள் மேற்கொண்டதிலேயே மிக நீண்ட பயணம் எது? நவீன ஸ்மார்ட்போன்கள் எதுவும் இல்லாமல் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து உங்களால் பயணம் செய்ய முடியுமா? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

11 ஜூலை, 2026

நலக்குறிப்புகள்

இன்றைய புத்தகம்

புதிய வெளியீடு
 
குரங்கிலிருந்து சிதாருக்கு (கவிதை) 

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kurangilirundhusitharukku_2008/

மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/kurangilirunthusitharukku_2017/

அமேசானில் வாங்க: 
https://www.amazon.in/dp/B0H7MG4G4N

மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0H7JMXVN3

#Kalachuvadu #TamilBooks #TamilLiterature #ReadTamil #TamilReaders #Bookstagram #BookLovers #MustRead #IndianBooks #Books #Ebook #KindleBooks #ReadingCommunity #SupportTamilPublishing #காலச்சுவடு #தமிழ்நூல்கள் #தமிழ்புத்தகம் #தமிழ்இலக்கியம் #வாசிப்பு #நூல்வாசிப்பு #புத்தகஅன்பர்கள் #தமிழ்வாசகர்கள் #புத்தகபரிந்துரை #மின்னூல்

அருள்வாக்கு

இன்றைய சிந்தனைக்கு

​அறிவியலும் ஆன்மீகமும்: குவாண்டம் பிணைப்பும் பிரபஞ்ச ஒற்றுமையும்


​அறிவியலும் ஆன்மீகமும்: குவாண்டம் பிணைப்பும் பிரபஞ்ச ஒற்றுமையும்

​"இயற்கை அறிவியலின் கோப்பையிலிருந்து பருகும் முதல் மடக்கு உங்களை ஒரு நாத்திகராக மாற்றலாம்; ஆனால், அந்தக் கோப்பையின் அடியில் உங்களுக்காக இறைவன் காத்திருக்கிறார்."

வெர்னர் ஹைசன்பெர்க் (குவாண்டம் இயற்பியலாளர்)


​நமது அன்றாட வாழ்க்கையில், நாம் அனைவரும் இந்த உலகத்திலிருந்து தனித்து வாழும் மனிதர்களாகவே நம்மை உணர்கிறோம். பிரம்மாண்டமான இந்தப் பேரண்டத்தில் நாம் ஏதோ ஒரு தனித்தனித் துளிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், ஆன்மீக மரபுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ரகசியமாய் உரைத்து வந்த ஒரு உன்னத உண்மையை, நவீன இயற்பியல் இன்று நமக்கு மிக அழகாக நிரூபித்துக் காட்டியுள்ளது: இந்த அண்டவெளியில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளன.

​இதற்கான மிகச்சிறந்த அறிவியல் சான்றை, அணுவின் நுண்துகள்கள் உலகை ஆராயும் குவாண்டம் இயற்பியல் நமக்கு "குவாண்டம் பிணைப்பு" (Quantum Entanglement) என்ற நிகழ்வின் மூலம் விளக்குகிறது.

​குவாண்டம் பிணைப்பு என்றால் என்ன?

​பொதுவான அறிவியல் விதிகளின்படி, ஒரு பொருள் மற்றொரு பொருளைப் பாதிக்க வேண்டுமானால், அவற்றுக்கு இடையே ஏதேனும் ஒரு தொடர்பு அல்லது சமிக்ஞை (Signal) இருக்க வேண்டும். ஆனால், குவாண்டம் உலகோ இந்த எல்லையை முற்றிலுமாகத் தகர்க்கிறது.

​இரண்டு நுண்துகள்கள் ஒன்றுடன் ஒன்று "குவாண்டம் பிணைப்பில்" இணையும் போது, அவற்றுக்கு இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத, பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. அதன் பிறகு, அந்த இரண்டு துகள்களையும் நீங்கள் எவ்வளவு தொலைவில் பிரித்து வைத்தாலும்—அவை ஒரு அறைக்குள்ளே இருந்தாலும் சரி, அல்லது பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் பிரபஞ்சத்தின் இரு வேறு முனைகளில் இருந்தாலும் சரி—ஒரு துகளில் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தினால், அடுத்த கணமே, எந்த ஒரு காலதாமதமும் இன்றி மற்றொன்றும் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது! அவற்றுக்கு இடையே எந்தத் தகவலும் பயணிப்பதில்லை; அவை இரண்டு தனித்தனித் துகள்களாகச் செயல்படாமல், ஒரே ஒட்டுமொத்தப் பொருளாகவே இயங்குகின்றன.

​பிரபஞ்சத்தின் ஆதி எதிரொலி

​இந்தக் கண்டுபிடிப்பு காலம் மற்றும் வெளி (Space and time) பற்றிய நம் புரிதலை மாற்றுவதுடன் நின்றுவிடாமல், ஆன்மீகத் தத்துவத்தின் மையப் புள்ளியையும் நமக்கு நினைவூட்டுகிறது. "வசுதைவ குடும்பகம்" (இவ்வுலகமே ஒரு குடும்பம்) என்ற சிந்தனையும், எந்த ஒரு உயிரும் தனித்து இயங்குவதில்லை என்ற பிரபஞ்சப் பேரறிவுத் தத்துவமும் இதனுடன் கச்சிதமாகப் பொருந்துகின்றன.

​பெருவெடிப்பின் (Big Bang) போது இந்த அண்டம் முழுவதும் ஒரே ஒரு புள்ளியிலிருந்தே தொடங்கியது என்று அறிவியல் கூறுகிறது. அப்படியென்றால், காலத்தின் தொடக்கத்தில் இப்பிரபஞ்சத்தின் அனைத்துத் துகள்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன. இன்று தூரத்தில் மின்னும் நட்சத்திரங்கள், நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலின் செல்கள் என அனைத்தும் அன்று ஒரே மூலத்திலிருந்து உருவானவைதான். அந்த வகையில், இப்போதும் நாம் இப்பிரபஞ்சத்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதே உண்மை.

​வாழ்வை உன்னதமாக்கும் அறிவியல் உண்மை

​இந்தக் குவாண்டம் பிணைப்பைப் புரிந்து கொள்ளும் போது, நம் வாழ்க்கை முறையே மாறுகிறது:

  • நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மதிப்பிருக்கிறது: இப்பிரபஞ்சம் ஒரு மாபெரும் வலைப்பின்னல் என்றால், நாம் உருவாக்கும் நேர்மறை எண்ணங்களும், காட்டும் அன்பும், அமைதியும் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திலும் நல்வழிகளைப் பரப்பும் ஆற்றல் கொண்டவை.
  • நாம் என்றும் தனித்து விடப்படவில்லை: நாம் தனித்தனியானவர்கள் என்று நினைப்பது நம் புலன்களின் மாயை மட்டுமே. இந்த உன்னதப் பிரபஞ்சத்தின் பின்னணியில், நாம் எப்போதும் எல்லாவற்றுடனும் இணைந்தே இருக்கிறோம்.

​நவீன அறிவியலின் வழியே பார்க்கும் போது, ஆன்மீகத்தின் உன்னத உண்மை நமக்கு மீண்டும் உறுதியாகிறது: நாம் இந்த உலகத்தில் வெறும் பார்வையாளர்கள் அல்ல; பிரபஞ்சம் என்னும் மகா சங்கீதத்தின் மிக முக்கியமான இசைக் குறிப்புகள்!


கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏


9 ஜூலை, 2026

​பயணங்கள் முடிவதில்லை–3: யுவான் சுவாங்கின் வரலாற்றுப் பயணம்

​சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, நாலந்தா பல்கலைக்கழகத்தில் படித்து, பௌத்த மதக் கருத்துக்களைத் தேடி அலைந்த அவரது வீரமும் விவேகமும் நிறைந்த பயணத்தை ஒரு அழகான கட்டுரையாக  வடிவமைத்துக் கொடுத்துள்ளோம்.

​பயணங்கள் முடிவதில்லை–3: யுவான் சுவாங்கின் வரலாற்றுப் பயணம்

​தேடல்களும் பயணங்களும் தான் மனித நாகரிகத்தின் திசையை மாற்றியமைக்கின்றன. "பயணங்கள் முடிவதில்லை" தொடரின் இந்த மூன்றாவது பகுதியில், வரலாற்றின் மிக முக்கியமான, ஆபத்துகள் நிறைந்த ஒரு நீண்ட பயணத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். அதுதான், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவை நோக்கிப் பயணித்த பௌத்தத் துறவி யுவான் சுவாங் (Xuanzang) அவர்களின் வரலாற்றுப் பயணம்!

​தேடலின் தொடக்கம்

​சீனாவின் டாங் (Tang) வம்ச ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த யுவான் சுவாங், பௌத்த மதக் கோட்பாடுகளில் இருந்த சந்தேகங்களுக்கு விடை தேட விரும்பினார். பௌத்த மதம் தோன்றிய இந்தியாவிற்குச் சென்று, அதன் அசல் நூல்களைப் படித்து, உண்மையை அறிய வேண்டும் என்ற தாகம் அவரிடம் இருந்தது. ஆனால், அந்த காலத்தில் சீனாவை விட்டு வெளியேற அரசரின் தடை இருந்தது. அனைத்தையும் மீறி, தனது 27-வது வயதில் (கி.பி. 629) யாருக்கும் தெரியாமல் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.

​மரணத்தின் பாதையில் ஒரு பயணம்

​யுவான் சுவாங்கின் பயணம் சாதாரணமானதாக இருக்கவில்லை. அது மரணத்தோடு கைகுலுக்கும் ஒரு சாகசப் பயணம்:

​கோபி பாலைவனம்: 

தகிக்கும் மணல், சுட்டெரிக்கும் வெயில், குடிக்கத் தண்ணீரின்றி, எலும்புக்கூடுகள் சிதறிக்கிடந்த கோபி பாலைவனத்தைக் கடக்க அவர் பல நாட்கள் போராடினார்.

​பனி மலைகள்: 

தியான் ஷான் (Tian Shan) போன்ற மிக உயரமான பனி மலைகளைக் கடக்கும்போது, கடும் குளிரால் அவரோடு வந்த பல பயணிகளும் குதிரைகளும் மடிந்தனர்.

​கொள்ளையர்கள்: 

வழியெங்கும் கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, மத்திய ஆசியா வழியாக கைபர் கணவாய் வழியே இந்தியாவின் எல்லையை அடைந்தார்.

​இந்தியாவில் யுவான் சுவாங்

​இந்தியாவிற்குள் நுழைந்த யுவான் சுவாங், காஷ்மீர், பஞ்சாப் வழியாகப் பயணித்து, பௌத்த மதத்தின் புனிதத் தலங்களான கபிலவஸ்து, குசிநகர், சாரநாத் மற்றும் போத்கயா ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

​நாலந்தா பல்கலைக்கழகம்: பயணத்தின் உச்சம்

அப்போதைய உலகின் மிகச்சிறந்த கல்வி மையமான நாலந்தா பல்கலைக்கழகத்தில் யுவான் சுவாங் பல ஆண்டுகள் தங்கினார். அங்கிருந்த தலைமை ஆச்சார்யாரான சீலபத்திரரின் கீழ் பௌத்த தத்துவங்களையும், சமஸ்கிருத மொழியையும் கற்றுத் தேர்ந்தார். அவரது அறிவைக் கண்டு வியந்த இந்திய அறிஞர்கள் அவரைப் பெரிதும் மதித்தனர்.

​தமிழகத்திற்கு வந்த பயணி

​யுவான் சுவாங் வட இந்தியாவுடன் நின்றுவிடாமல், தென்னிந்தியா நோக்கியும் பயணித்தார். பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு கி.பி. 640-களில் அவர் வருகை தந்தார். காஞ்சியின் கல்விச் சிறப்பு, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த மடாலயங்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் ஆட்சித் திறமை பற்றித் தனது குறிப்புகளில் மிக உயர்வாக எழுதியுள்ளார்.

​கம்பீரமான வீடு திரும்புதல் மற்றும் அழியாப் புகழும்

​இந்தியாவில் தனது 16 ஆண்டு காலத் தேடலை நிறைவு செய்த யுவான் சுவாங், கி.பி. 643-ல் சீனா நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். அப்போது வட இந்தியாவை ஆண்டு வந்த பேரரசர் ஹர்ஷ வர்த்தனரும், காமரூப (அஸ்ஸாம்) மன்னர் பாஸ்கர வர்மனும் யுவான் சுவாங் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தனர். எனவே, அவர் பாதுகாப்பாக சீனா சென்றடைய அனைத்து அரச மரியாதைகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
​அவர் கொண்டு சென்ற பொக்கிஷங்களும், அவரது திரும்பும் பயணமும் ஒரு மாபெரும் அரச ஊர்வலம் போலக் காட்சியளித்தது:

​அரிய பொக்கிஷங்கள் மற்றும் சிலைகள்: 

புத்தரின் புனிதமான உடல் எச்சங்கள் (Relics), தங்கத்தாலும், வெள்ளியாலும், சந்தன மரத்தாலும் செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகள் ஆகியவற்றை அவர் மிக பத்திரமாக எடுத்துச் சென்றார்.

​அளப்பரிய நூல்கள்: 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர் சேகரித்த, பௌத்த மதத்தின் அசல் தத்துவங்கள் அடங்கிய 657 சமஸ்கிருத ஓலைச்சுவடி நூல்கள் இந்த ஊர்வலத்தின் மிக முக்கியப் பொக்கிஷமாக இருந்தன.

​யானைகள் மற்றும் குதிரைகள்: 

இந்த அரிய நூல்களையும், சிலைகளையும், பொக்கிஷங்களையும் சுமந்து செல்வதற்காகப் பேரரசர் ஹர்ஷா 20-க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான யானைகளையும், எண்ணற்ற குதிரைகளையும் வழங்கியிருந்தார்.

​பல்லக்குகள் மற்றும் பாதுகாவலர்கள்: 

வழியில் கொள்ளையர்களிடமிருந்தும், இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் யுவான் சுவாங்கையும், அந்தப் பொக்கிஷங்களையும் பாதுகாக்க மன்னரின் சிறப்புப் பல்லக்குகளும், ஆயுதம் ஏந்திய நூற்றுக்கணக்கான குதிரைப்படை வீரர்களும், பாதுகாவலர்களும் துணைக்கு அனுப்பப்பட்டனர்.

​இந்த மாபெரும் ஊர்வலம் பனி படர்ந்த ஆபத்தான பாமிர் மலைத்தொடர் மற்றும் காஷ்கர் வழியாகப் பயணித்தபோது, சில விபத்துகளால் சில யானைகளும், நூல்களும் நதியில் மூழ்கிப் போயின. இருப்பினும், எஞ்சிய பெரும்பகுதியோடு அவர் கி.பி. 645-ல் சீனாவின் தலைநகரான சாங்கான் (Chang'an) நகரை வந்தடைந்தார்.

​அவரது வருகையைக் கேள்விப்பட்ட சீனப் பேரரசர் டாங் தைஸாங் (Tang Taizong), யுவான் சுவாங்கிற்குப் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தார். நகரின் வீதிகளெங்கும் மக்கள் கூடி நின்று, யானைகளும் குதிரைகளும் சுமந்து வந்த அந்த வரலாற்றுப் பொக்கிஷங்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

​தனது மீதமுள்ள வாழ்நாளை அந்த நூல்களைச் சீன மொழியில் மொழிபெயர்க்கவே அவர் செலவிட்டார். அவர் எழுதிய "மாபெரும் டாங் வம்சத்தின் மேற்கத்திய பயணக் குறிப்புகள்" என்ற நூல் தான், பிற்காலத்தில் இந்தியாவின் வரலாற்றையும், விடுபட்டுப்போன பல வரலாற்று இடங்களையும் கண்டறிய தொல்பொருள் ஆய்வாளர்களுக்குப் பேருதவியாக இருந்தது.

கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

இன்றைய குறள்

சுற்றுச்சூழல்

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக மஞ்சரி

6 ஜூலை, 2026

இன்றைய குறள்


📜📜📜📜📜📜📜📜📜


*🌺 தினம் ஒரு திருக்குறள் தொடர் கவிதை – பகுதி 16 🌺*


📜📜📜📜📜📜📜📜📜


*📜 மழையின்றி வாழ்வு இல்லை*

*திருக்குறள் : 16*

 *விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று* *ஆங்கே*
*பசும்புல்* *தலைகாண்பு அரிது.*

*கவிதை*

*வானத்தில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும்,*
வாழ்க்கை என்ற நூலின் பொன்னான எழுத்தாகும்!

*ஒரு துளி நீரால் பசும்புல் தலையெழும்,*
ஒரு நல்ல செயலில் மனிதம் தலைநிமிரும்!

*இயற்கை தரும் வரங்களை மதிக்கக் கற்றிடுவோம்,*
இனி வரும் தலைமுறைக்கும் பசுமையை விட்டுச் செல்வோம்!

*மரம் நடுவது மண்ணுக்குச் செய்யும் நன்றியாம்,*
மழையைச் சேமிப்பது மனிதனின் கடமையாம்!

*நீர் காக்கும் ஒவ்வொரு கையும்,*
நாளைய உயிர்களைக் காக்கும் தெய்வக் கையாம்!

*வள்ளுவர் கூறிய குறளின் ஆழ்ந்த பொருளை உணர்ந்து,*
வாழ்வின் ஒவ்வொரு நாளும் இயற்கையை வணங்குவோம்!

*பசுமை நிறைந்த பூமியே மனிதனின் உண்மையான செல்வம்,*
பாதுகாப்போம் அதை — தலைமுறைகள் வாழ்வதற்காக!

*✍️ ✨*

ஹோமியோபதி

அருள்வாக்கு