19 செப்., 2010

யோக சித்தி-38: உலக வாழ்வு-4

வினையுலகை  அஞ்சாதவீரன்  போல்  வெல்க
மன  உறுதியாலே  மகிழ்ந்து.

இந்த வினையுலகை மாயை  பந்தம்  என்று  அஞ்சி  ஓடக்கூடாது.  இதை  அஞ்சாத  வீரனைப்போல  வெல்ல  வேண்டும்.  எதனால் வெல்வது?  மன உறுதியினால்.  மனஉறுதி  எப்படி  வரும்?  'இரு விகார  அலைகள்  யானல்ல;    நான்  ஆழி, நான்  எல்லையற்ற  ஆன்மா'   என்றறிந்தால்  மனம் உறுதியாகும்.  ஆத்மஜயத்தால்  உலகை  வெல்லலாம்.  இறைவனை  உள்ளே  கண்டோருக்கு  இயற்கை  அடிமையாகும்.

கருத்துகள் இல்லை: