28 செப்., 2010

யோக சித்தி-43: அறம் -4:

அறமென்று  அறிந்ததனை  அஞ்சாது  செய்மின்;
இறைவனருள்  காக்கும்  இனிது.

மனச்சாட்சிக்குப்  பொதுவாக,  'இது  தருமம், இது நியாயம், இது அறம்'  என்று அறிந்ததைப் பிறர் இகழ்ச்சிக்கும், இடர்களுக்கும்  பயப்படாமல்,  கலங்காமல்,  செய்மின்.  அப்படிச் செய்யும்  அறவோரை  இறைவனருளே  மகிழ்வுடன்  பாதுகாக்கும்.   

கருத்துகள் இல்லை: