28 ஜூன், 2013

இன்றைய சிந்தனைக்கு-164:

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே!
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே!
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே!
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே!
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே!
குருவை வணங்கக் கூசி நிற்காதே!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே!

வள்ளலார்

கருத்துகள் இல்லை: