28 பிப்., 2015

திருப்புகழ்-2: விநாயகர் துதி

விநாயகர் துதி

கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி
     கப் பியகரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
     கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொருதிரள் புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை
     மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
     அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
     அப்புன மதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் - பெருமாளே!    

கருத்துகள் இல்லை: