1 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-1:

இன்று காலை தம்பி நெல்லையப்பனின் நண்பர் திரு பாலசுப்ரமணியன் அவர்களை திருப்போரூரில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு இனிய அனுபவம்.

அவர் திருப்போரூர் ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறையிலிருந்து 108 பாடல்களை கையினால் எழுதி பிரதியெடுத்து, பாராயணம் செய்ததை அறிந்தேன். அவரது அந்த குறிப்பேட்டைப் பெற்று தினமும் ஒரு பாடல் அனைவரும் படித்துப் பயன்பெற, என்னுடைய வலைப்பூவிலும், முகனூலிலும் பதிவதாகச் சொன்னேன்.

அதன்படி, முதற் பாடல்:

நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
பேயேன் இழைத்த பெரும்பிழையை – நீயே
பொறுத்தாள்வ துன்கடனாம் போரூரா என்னை
ஒறுத்தால் எனக்கார் உறவு. 

நன்றி:

திரு பாலசுப்ரமணியன் அவர்கள்

கருத்துகள் இல்லை: