பிரான்சில் கொரோனாவுக்கு மேலும் இரண்டு மருத்துவர்கள் பலி!
தமிழ்மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிரான்சில் ஏற்கனவே ஏழு மருத்துவர்கள் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ள நிலையில், மேலும் இரண்டு வைத்தியர்கள் சாவடைந்துள்ளானர். இத்துடன் சாவடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
செவ்ரோன் மற்றும் ஓல்னே-சூ-புவாவில் (Seine-Saint-Denis) அமைந்துள்ள Robert-Ballanger வைத்தியசாலையில், 65 வயதுடைய பொது மருத்துவரான Kabkéo Souvanlasy சாவடைந்துள்ளார். இவர் கடமையில் இருந்த நேரம், கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி, கடந்த ஒரு மாதகாலமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Hauts-de-France இலுள்ள Villers-Outréaux இல் கடமையாற்றிய 64 வயதுடைய Philippe Lerche எனும் பொது மருத்துவர் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ளார்.
உள்ளார். இதனை இப் பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS)அறிவித்துள்ளது.
வைத்தியர்கள் தாதிகள் சுகாதார பணியாளர்கள் தியாகங்களைப் போற்றுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக