29 ஜூன், 2020

குட்டிக்கதை


*முன்பு ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..*

*ஒரு நாள் இரவு...* *மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது.*

*காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.*

*அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.*

*ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் மன்னன்.*

*அவரும் எவ்வளவோ பாடுபட்டார்.*

*தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன !*

*மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.*

*எதற்கும் பலன் இல்லை.*

*மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.*

*எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.*

*மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும், பறந்து கொண்டிருந்ததால், அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.*

*உணவு சாப்பிடுவது  குறைந்து* 
*மன்னன் தன் பொலிவு இழந்தான்.*

*ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன்*,
*இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான் !*

*எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான்.*

*தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான்.*

*இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன.*

*அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி*
*மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.*

*பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.*

*"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!*

*நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.*

*இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.*

*இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.*

*அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி.*

*மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.*

*அது 'ராஜ மூலிகை' என்பதால்*
*அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார்.*

*மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது !*

*அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது.*

*மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி!*

*துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.*
*மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.*

*நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது !*

*துறவி விடை பெற்றுக்கொண்டார்.*

*அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும், துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான் !*

*""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!'*

*துறவி புன்னகை பூத்தார் !*

*"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?*

*மன்னனின் செவிக்குள்!*
*அதுதான் இல்லை !*

*மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.*

*போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும் !*

*அந்தச் சிறிது நேரத்தில்*
*அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது!*

*அது மன்னனின் மனதில் அது  குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது !*

*எனவே அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் !*

*"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''*

*மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!*

*பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான்!*

*அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்.*

*தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்* 

*அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான்.*

*ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன் !*

*பின் ஒருநாள் பூஜை செய்து*
*காலை இருட்டு நேரத்தில்* *மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு*
*ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன்!*

*மன்னன் நம்பி விட்டான் !*
*அவன் நோயும் தீர்ந்தது.*

*சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.*

*இன்று மனித இனத்தைப்* *பிடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை*நம் மனங்களில் தான் இருக்கின்றன.*

*காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது!*

*பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது !*

*.''இது நகைச்சுவை அல்ல;*

*இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும்  விளக்கம்.*

*காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல,*

*இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு, நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!*

*("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட,*

*"அதைப் பற்றி ஏற்படுத்தப்  பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிறது!*

*அவரவர்கள் " கொரோனா தொற்றை" -   "கொரோனாவை" அல்ல!*
*"தொற்றை"-*
*கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு"* *- பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்!* *ஆச்சர்யமாக இருக்கிறது!*

 *இத்தனைக்கும் -*
*இது , "கொல்லும் நோய் அல்ல"!*
*இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள்.* 
*15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!*

*"தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும்*
*முயற்சியை" விட*

*"எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி", அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?*

*Immunity to be increased -* *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.*

*ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,*

*ஏழு கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!*

*மாஸ்க் கொடுப்து - நோய்க்கு பயப்படுவது - பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!*

*நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பது - நோயை (நம்மிடம்  வருவதற்கு) - அஞ்சும்படி செய்வது!*

*இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக் கொண்டே யிருப்பதா?*

*அல்லது*

*கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு, அஞ்சும்படி செய்வதா?

கருத்துகள் இல்லை: