20 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1042: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

விளக்கம்:

பாடல் #1041 இல் உள்ளபடி சாதகர் பார்க்கின்ற உலகங்கள் அனைத்திலும் பரவி எழுகின்ற ஜோதியான இறைவனது உண்மையான தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்கின்றவர்கள் யாரும் இல்லை. அந்த ஜோதியின் உண்மையான தன்மையை தமக்குள் உணரும் வரை காத்திருக்கும் சாதகர்கள் அதை முழுவதும் அறிந்து உணர்ந்த பிறகு அவர்களின் நவகுண்டமாகிய உடலானது மேன்மை நிலையை அடைந்து என்றும் அழியாமல் கோடி யுகங்கள் நிலைத்திருக்கும்.

மனமார்ந்த நன்றிகள் :

கருத்துகள் இல்லை: